திருப்பூர், டிச.31- திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், கன்ஸ்ட்ரோ மெகா 21 - 22 என்ற பெயரில் 16ஆவது கட்டிட கட்டுமான பொருட்கள் கண் காட்சி திருப்பூரில் துவங்கியது. திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் வெள் ளியன்று துவங்கிய இந்த கண்காட்சி அரங்கை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் திறந்து வைத் தார். கண்காட்சி மலரை திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் வெளியிட, கூட்ட மைப்பின் முன்னாள் மாநில தலைவர் தில்லைராஜன் பெற்றுக்கொண்டார். சங்கத்தின் நாள்காட்டி மற்றும் நாள் குறிப்பை கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சரவணன் வெளியிட சங்கத் தின் பட்டயத் தலைவர் சிதம்பரம் பெற் றுக்கொண்டார். இதைத்தொடந்து நடந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முரளி தலைமை வகித்து பேசினார். சங்க செயலாளர் ஜனார்த்தனன் வர வேற்புரையாற்றினார்.
கண்காட்சித் தலைவர் பழனிசாமி கண்காட்சி குறித்து பேசினார். முன்னாள் தலைவர் மணி கண்டன், கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் மோகன கண்ணன், சென்னை கார்த்திகேயன் அசோசியேட்ஸ் பொறி யாளர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க கண் காட்சி பொருளாளர் துரைசாமி, சங்க துணைத் தலைவர் ரமேஷ் என்கிற அருண், கண்காட்சி ஒருங்கிணைப்பா ளர் ஸ்டாலின் பாரதி, துணைச்செயலா ளர் பாரதிராஜா, துணை பொருளாளர் கார்த்திக், தகவல் தொடர்பாளர் கௌதம், கண்காட்சி மலர் குழு தலை வர் பிரகாஷ் மற்றும் கண்காட்சி குழு வினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். நிறைவில் கண்காட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இக்கண்காட்சி குறித்து ஏற்பாட்டா ளர்கள் கூறுகையில், இக்கண்காட்சி யில் 200 அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. கட்டிடத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும், கட்டி டத்தை அலங்கரிக்கும் பொருட்கள், மின் தூக்கிகள் என பல்வேறு நவீன வகை கட்டுமானப்பொருட்கள் அறி முகம் செய்யப்பட்டுள்ளன. ஜன.3ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை பொது மக்கள் இலவசமாக கண்டுகளிக்க லாம். கண்காட்சியின் மாலை நேரங்க ளில் பறையிசை, சிலம்பாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. கண்காட்சியை பார்வை யிட வரும் பொதுமக்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம், மருத்துவ ஆலோ சனை முகாம், இரத்த பரிசோதனை முகாம், மற்றும் இ.சி.ஜி பரிசோதனை முகாம் ஆகியவை நடைபெறுகின் றன, என்றனர்.