districts

img

சோனியா காந்தி குறித்து அவதூறு அமைச்சர் ஸ்மிருதி ராணி படத்தை எரித்து காங்கிரஸ் போராட்டம்

சேலம், ஜூலை 30- ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் படத்தை எரித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாக தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசிய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனி யன்று தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக சேலம் குரங்குசாவடி பகுதியில், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் புகைப்படத்தை கிழித்து தீ வைத்து எரித்தனர். இதில், காங்கிரஸ் கட்சி சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தநாரி, மாநில நிர்வாகி கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் காவல் துறையினர்  அமைச்சரின் உருவப்படத்தை எரித்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.