சேலம், நவ.8- சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவ மாணவர் களுக்கு ஜாமியா கல்வி அறக்கட்டளை சார்பில் வாழ்த்து தெரி விக்கப்பட்டது. சேலம் ஜாமியா கல்வி அறக்கட்டளை மூலம் நீட் பயிற்சி பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர் களுக்கு பாராட்டு விழா சேலம் ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் முத்தவல்லி எஸ்.ஆர்.அன்வர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வக்பு வாரிய மாநில முதன்மை துணைத்த லைவர் எம்.அப்துல் ரகுமான், சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். நடப்பாண்டில் நீட் தேர்வில் ஜாமியா கல்வி அறக்கட்டளை பயிற்சி மையத்தில் படித்த 5 மாணவர்கள் மருத்துவக்கல்லூ ரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். அவர்களை பாராட்டும் வித மாக இந்நிகழ்ச்சி நடைபெற்றதாக ஜாமியா கல்வி அறக்கட்ட ளை செயலாளர் ஏ.சாகுல் ஹபீத் தெரிவித்துள்ளார்.