நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தியாகி சி.வேலுச்சாமியின் இல்லத்திற்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, வேலுச்சாமி யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்ட செயலாளர் எம்.மணிகண்டன், ஒன்றிய நிர்வாகிகள் நவீன், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.