districts

img

தோழர் பி.ராமமூர்த்தி 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர், செப். 22 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாள ருமான பி.ராமமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகக் கிளைச் செயலாளர் பா.சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தார். இதில் பி.ராமமூர்த்தி உருவப்படம் மலர் மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ராமமூர்த்தி படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, அவரது பணி களை நினைவு கூர்ந்து பேசினார். இதில் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி.மூர்த்தி, எஸ்.சுப்பிரமணியன், ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் உள்பட கட்சி  அணியினர் கலந்து கொண்டு பி.ராமமூர்த்திக்கு மலரஞ் சலி செலுத்தினர்.

;