districts

img

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது கட்டாய வசூல்: ஏழை பெற்றோர்கள் வேதனை

திருப்பூர், மே 27- திருப்பூர் வட்டாரத்தில் அரசுப்  பள்ளியில் வளர்ச்சி நிதி என்ற பெய ரில் மாணவர் சேர்க்கையின்பொழுது ரூ.3500 கட்டாய வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பெருமா நல்லூரில் அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவி கள் படித்து வருகின்றனர். பள்ளியில்  2023ஆம் ஆண்டிற்கான மாணவியர்  சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிதாக மாணவி களைப் பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.3500 கேட்பதாக பெற் றோர்கள் சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இப்பள்ளியா னது புதிதாக மேல்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டுள்ளதால், இன் னும் போதுமான ஆசிரியகளுக் கான இடங்கள் ஒதுக்கப்படவில்லை.  போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கல்வித்தரம் பாதிப்பதாக பெற்றோர் கள் தெரிவித்தனர். மேலும், மாணவி கள் சிலருக்கு யுரினரி இன்பெக்ஸன் வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து,  வளர்ச்சிக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு 2  ஆசிரியர்கள், 1 கணினி செயல்பாட் டாளர், 1 இரவு காவலர், 1 துப்பரவு  பணியாளர் நியமித்துள்ளோம். மொத்தமாக இவர்களுக்கு மாதம்  ரூ.45000 பள்ளி வளர்ச்சி குழு நிதி யிலிருந்து ஊதியமாக தரப்படுகிறது. எந்த பெற்றோரிடமும் ரூ.3500 கட்டாய வசூல் செய்வதில்லை. பள் ளியின் தேவைகளை கூறி விருப்பப் பட்ட பெற்றோர்களிடம் மட்டுமே வாங்கப்படுகிறது என்று தெரி வித்தார். எனினும் தலைமை ஆசிரி யர் சொன்னதற்கு மாறாக, கட்டாய  வசூல் செய்ததாக பெயர் குறிப்பிட  விரும்பாத பெற்றோர்கள் சிலர் கூறி னர்.  இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அஹமத் கூறுகையில், பள்ளி வளர்ச்சி நிதி ஊர்களில் உள்ள வசதி  படைத்த செல்வந்தர்களிடம் வாங்க  வேண்டும். ஏழை, எளிய பெற்றோர்க ளிடம் மாணவர் சேர்க்கையின் போது  வசூலிப்பது முறையானது அல்ல. மேலும், பள்ளியின் தேவையை கருதி  பள்ளி தொடங்கிய பிறகு கலந்து ஆலோசித்து பெற்றோரின் விருப் பத்தில் அவர்கள் தரும் நிதியை வாங் குவதில் பிரச்சனை இல்லை. மாறாக  ரூ.3500 என நிர்ணயித்து வசூலிப்பது  அரசுப்பள்ளியில் சேர்க்க வரும்  பெற்றோர்களிடம் மாணவர் சேர்க் கைக்கான கட்டணம் போல் ஆகி விடும். இது அரசுப்பள்ளியில் சேர்க்க வரும் தொழிலாளிகளுக்கும், மாண வர்களுக்கும் சுமையாகிவிடும். இந்த போக்கு நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளி களில் உள்ளது. அரசுப்பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு வதன் மூலம் ஏழை, எளிய மாணவர் களின் சுமையை குறைக்க முடியும். மேலும் ஆசிரியர் தேர்வு எழுதியவர் களுக்கு வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய முடியும், என்று கூறி னார்.