districts

சுரங்கத்துறை இயக்குனர் மீது புகார்

திருப்பூர், செப்.3 - ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற தாக, சுரங்கத் துறை துணை இயக்குனர்  மீது சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு  இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாது காப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று வாராந்திர குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா. முகிலன் மனு அளித்தார். அதில்,  காங்கேயம் வட்டம், குட்டப்பாளையம்  கிராமம், ஆர்.பி.பி. கல் குவாரியில்  எண்ணற்ற விதிமீறல்கள் நடைபெறு கிறது. இதுகுறித்து ஆதாரத்துடன் புகார்  கொடுத்திருக்கிறோம். குவாரிக்கு குத்தகை ஆவணம் பதியக் கூடாது என  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், ஆட்சியருக்கு தெரிவிக்காமலேயே, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்  கொண்டு, ஆர்.பி.பி. கல் குவாரிக்கு சட் டவிரோதமாக அனுமதி கொடுத்துள்ள னர். இச்செயலில் ஈடுபட்ட திருப்பூர்  கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மீது கிரிமினல் வழக்கு பதிவு  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கும் வரை போராட் டத்தை தொடருவோம் என தெரிவித் துள்ளனர்.  மேலும், குட்டப்பாளையம் கல் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திருப்பூரில் கடந்த ஆக.26 அன்று ஏற்பட்ட கடுமை யான நில அதிர்வு குறித்து வெளிப் படையாக வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையத்தில் நடக்க இருக் கும் 3 கல் குவாரி கருத்துக் கேட்பு கூட்டத் தில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பங் கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த மனு அளிக்கை யில், சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் வெங்கலப்பாளையம் பழனி சாமி, குட்டப்பாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராசு மற்றும் விவசா யிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற னர்.