தருமபுரி, நவ.29- தருமபுரி அருகே யானைகளால் சேதம டைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்ட வனப்பகுதியை ஒட்டிய ஈச்சம்பள்ளம், கரகூர், சீரியம்பட்டி, கோட்டூர், சொக்கன் கொட்டாய், நல்லூர், பாவளி, ஆத்துக் கொட்டாய், கண்சால்பெல், சீரண்டபுரம் உள் ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், வாழை, தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர் கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் கடந்த 2 மாதங்களாக விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இதுதொடர்பாக வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க விவசாயி கள் இரவில் தீப்பந்தங்களுடன் காவல் இருந்து வருகிறார்கள். மேலும் யானை களை அச்சத்துடன் விரட்டி வருகிறார்கள். இதனால் அவர்களின் உயிருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, யானைகளால் சேதப்படுத்தப் பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்க ளுக்குள் புகுவதை தடுக்க இரவில் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் குட்டியுடன் சுற்றித்திரியும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.