திருப்பூர், ஜன.2- திருப்பூர் மாநகராட்சி 55ஆவது வார்டு பெரிச்சிபாளையம் காலனி பகுதியில் 54 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 124 குடும்பங்கள் பட்டா வழங்க வேண் டும், அவர்களை காலி செய்யக் கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. பெரிச்சிபாளையம் காலனியில் மாநகராட்சிக்கு மாதம் 10 ரூபாயில் துவங்கி தற்போது மாதம் 500 ரூபாய் வாடகை செலுத்தி 124 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீண்ட காலமாக குடியிருந்து வரும் இந்த குடும்பங்களை காலி செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனை நேரில் சந்தித்து முறையிட்டனர். இதன்படி அம்மக்களை காலி செய்யக்கூடாது. அவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதி காரிகளுக்கு எம்.பி., கடிதம் அனுப்பி யுள்ளார். இந்நிலையில், கடந்த சனியன்று மதியம் எம்.பி., சுப்பராயன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் அந்த பகுதி மக்களை சந்தித்தனர். உங்களை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப் பினரும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கிறது, கவலை கொள்ள வேண் டாம் என்று அவர்கள் உறுதியளித் தனர். இந்நிகழ்வில் துணைமேயர் ஆர். பாலசுப்பிரமணியம், சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, மாந கர் மாவட்ட செயலாளர் எஸ்.ரவிச்சந் திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். சுந்தரம், சிபிஐ சேர்ந்த ஏ.செந்தில் குமார், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.