உடுமலை, மார்ச் 14 - பெண்ணுரிமை போராட்டத்தோடு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன் எடுப்போம் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் உறுதி மொழி ஏற்றுக்கொண்ட னர். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட மகளிர் துணைக்குழு சார்பில், திங்க ளன்று உடுமலை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராணி தலை மையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், உழைப்பாளி மக்க ளின் உரிமை போராட்டத்தையும், வர்க்கப் போராட்டத்தை யும் பெண்கள் தலைமையேற்று நடத்திய வரலாற்று பின்பு லத்தில்தான் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உல கில் சமத்துவம் படைக்க ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு கள் இல்லாத உலகை படைக்கவும், உழைப்பில் ஆண்க ளுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கும் பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளது. இந்திய நாட்டில் சாதி, மதம் என்ற பெயரில் உழைக்கும் நம்மை பிரிக்கும் பிரிவினைவாதி களைப் புறக்கணிப்போம். வர்க்க சுரண்டல் இல்லாத உலகை படைக்கவும், பெண்ணுரிமை போராட்டத்தோடு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை மகளிர் தின நாளில் முன்னெடுப்போம் என்று கருத்தரங்கில் உறுதி ஏற்கப் பட்டது. முன்னதாக பேரணி நடைபெற்றது. முன்னதாக மாவட்ட மகளிர் துணைக்குழு சார்பில் புஷ்ப வள்ளி வரவேற்றார். துணைக்குழு நிர்வாகிகள் ராஜேஸ்வரி, சிவபாக்கியம், சித்ராதேவி, எல்லம்மாள் மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.