திருப்பூர், மார்ச் 23- திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக கணினி சுழற்சி முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ் துராஜ் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிக ளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி நிறைவு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டிருந்த ,இந்த இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக் கிழமை அனுப்பிவைக்கும் பணி துவங்கியது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜிபிஎஸ் கருவி பொருட்த்தப்பட்ட வாகனங்களில் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட் டுள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறினார். இந்நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.