பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துக
ஈரோடு, அக்.24- பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு தர்ணா போராட்டம் அறிவித் துள்ளது. ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப் புக்குழுவின் ஈரோடு மாவட்ட கூட்டம் தலைவர் ஆர். முருகேசன் தலைமையில் ஈரோடு கூடலிங்கம் திட லில் வியாழனன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தலைவர் முருகேசன் மற்றும் செயலாளர் பி.சின்னசாமி ஆகியோர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப் போது, புதிய பென்சன் திட்டம் மற்றும் ஒருங்கி ணைந்த பென்சன் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்து விட்டு ஊழியர்களிடமிருந்து தொகை பிடிக்காத, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். பிஎஸ் என்எல் ஓய்வூதியர்களுக்கு 15 விழுக்காடு உயர்வுடன் 2017 முதல் ஓய்வூதிய மறு நிர்ணயம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுககு ரயில் பயண கட்டணச் சலுகையை மீண்டும் அமலாக்க வேண்டும். ஒன்றிய அரசு ஹெல்த் ஸ்கீம் நல மையங்களில் போதுமான மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்க வேண்டும். தனியார் பங்களிப் போடு செயல்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். 8 ஆவது ஊதியக்குழுவை அமைத்து 2026 முதல் அம லாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோ ருக்கு நேரிலும், இ.மெயிலிலும் மனு கொடுத்துள் ளோம். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வரு கின்ற நவ.13 ஆம் தேதியன்று தில்லியில் தர்ணாவில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம், என்றனர்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
சத்தியமங்கலம், அக்.24- சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில், கணக்கில் வராத ரூ. 1.50 லட்சம் பறிமுதல் செய்யபட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலத்தில் புதனன்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வுக் குழு அலுவலர் ஜெகநாதன் தலைமை யி்ல் சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. அதில், கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யபட்டது.
வாகனம் திருட்டு: இருவர் கைது
சேலம், அக்.24- சேலம் அரசு மருத்துவமனையிலிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைக் காண அவர்களாது உறவினர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த அக்.7 ஆம் தேதியன்று வீராணத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவர், அரசு மருத்துவமனை வளகத்தில் தான் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையத்தினர், கண்காணிப்பு கேமரா பதிவு களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில், வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர், வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, வியாழனன்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
பரம்பிக்குளம் அணை திறப்பு
கோவை, அக்.24- பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை யில் இருந்து மூன்று மதகுகள் வழியாக 1983 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தற்பொ ழுது 71.54 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு அணைக்கு 1556 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக 1983 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழக, கேரளா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
சுரங்கத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற தடை
காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை
காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை சேலம், அக்.24- சுரங்கத்தில் தேங்கிய தண்ணீரை வெளி யேற்ற தடை விதித்ததை கண்டித்து, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்று கையிட்டனர். சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மேகனசைட் நிறுவனம் பல ஆண்டுகளுக்குப் பிறகு செயல் பட தொடங்கியுள்ளது. வெள்ளக்கல் எனப் படும் மேக்னசைட் கற்களை வெட்டி எடுக்க 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சுரங்கப் பகுதிகளில் தேங்கி யுள்ள தண்ணீரை வெளியேற்றக்கூடாது என முன்னாள் ஒப்பந்ததாரர்கள் மாவட்ட நிர்வா கத்திடம் புகாரளித்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள தாக கருதி, சுரங்கத்திலுள்ள தண்ணீரை வெளியேற்ற மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. இதனால் 800 தொழிலாளர் கள் வேலையிழந்து வறுமைக்கு தள்ளப்பட் டுள்ளனர். எனவே, சுரங்கத்திலிருந்து வெளி யேற்றப்படும் தண்ணீரை தேக்கி வைக்க ஏற்க னவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு தண் ணீரை திருப்பிவிட வேண்டும். சுரங்கத்திலி ருந்து நீரை வெளியேற்றினால் தான் தொழி லாளர்கள் வேலைக்கு செல்ல முடியும். எனவே, சுரங்கத்திலிருந்து தண்ணீரை தடுப்ப ணைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தி, 200க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை புதனன்று முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபுவை சந்தித்து மனு அளித்தனர்.
தேனீ வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும்: ஆட்சியர் அழைப்பு
நாமக்கல், அக்.24- நாமக்கல் மாவட்டத்தில் தேனீ வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ச.உமா அழைப்பு விடுத்துள்ளார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேனீ வளர்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழ னன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா பேசுகையில், விவசாயிகளின் வரு மானத்தை அதிகரித்திட, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நம்மை சுற்றி எளிதாக கிடைக்ககூடிய பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அரசுத்துறை சார்பில் வழிகாட்டப் பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த முதலீட்டில் 100 சதவிகித அரசு மானியத்தில் தேனீ வளர்ப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பின் மூலம் ஆண்டிற்கு 10 கிலோ வரை தேன் உற்பத்தி செய்திட இயலும். வீடுகளி லேயே தேனீ வளர்ப்பதால் தங்கள் வீட்டு பயன்பாட்டிற்கும், அதனை சந்தைபடுத்தி வருமானமும் ஈட்ட இயலும். தேனீ வளர்ப்பினால் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க செய்வதன் மூலம் பழங்கள், காய்கறிகள் பயிர்களில் மகசூல் மற்றும் விளைப்பொருட்களின் தரத்தை அதிகரிக்க முடியும். வேளாண்மை மற்றும் சுற்றுப்புற சூழலில் நிலையான வளர்ச்சியை அதிரிக்க உதவுகிறது. பல்லுயிர் தன்னையை பராமரித்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், விவசாய உற்பத்தியை மேம்படுத்திட முடியும். தேன் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. தேன் மெழுகு அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும், கூழ் மருத்து தயாரிக்கவும், தேனீ மகரந்தம் மருத்துவ சத்து மிகுந்த பொருள், தேன் பசை இயற்கை மருத்துவ குண மிக்கது. தேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண வாக பயன்படுத்தலாம். எனவே, வீட்டிற்கு ஒரு தேனீ வளர்ப்பு என்று நாமக்கல் மாவட்டத்தில் தேனீ வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும். இக்கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ள பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தொழில் முனைவோர்க ளாக உருவாகி பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண் டும், என்றார். முன்னதாக, தேனீ வளர்ப்பு குறித்த கையேட் டினை ஆட்சியர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் வேளாண் மைத்துறை இணை இயக்குநர் பி.பேபிகலா, துணை இயக்குநர் எம்.புவனேஸ்வரி, வேளாண் விற்பனை துணை இயக்குநர் எ.நாசர் மற்றும் பயிற்சி வல்லுநர்கள், விவசாயி கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி வாகன கட்டண வசூலைத் திணிப்பதா? மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு
திருப்பூர், அக். 24 – தீபாவளி பண்டிகை சமயம், திருப்பூர் நக ரில் ஏற்படும் நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களுக்கு அபரிமிதமான வாடகை கட்டணம் வசூலிக்கும் முடிவை மாந கராட்சி நிர்வாகம் திணிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாநகரில் குமரன் சாலையில் ஏற் கனவே இருந்த டவுன்ஹால் கட்டிடத்தை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதி தாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம் மற் றும் இருசக்கர, நான்கு சக்கர நான்கு மாடி வாகன நிறுத்தம் அண்மையில் அப்போ தைய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், தற்போதைய துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. எனினும் பல மாதங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் உள்ளது. இந்த நிலையில் திடீரென, புதன்கிழமை, தீபாவளி பண்டிகை சமயம் இந்த வாகன நிறுத்தத்தை கட்டண அடிப்படையில் தற்கா லிகமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்ப தாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள் ளது. இதில் இரு சக்கர வாகனங்களை மூன்று மணி நேரம் நிறுத்துவதற்கு ரூபாய் 25 வீதம், நான்கு சக்கர வாகனங்களை மூன்று மணி நேரம் நிறுத்துவதற்கு ரூபாய் 100 வீதம் என வும், கூடுதலாக நிறுத்தப்படும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இருசக்கர வாகனத்திற்கு ரூ.10, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.25 வீதம் வசூலிக்கப்படும் என்று அநியாயமான கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூரில் பல கட்டுமான பணிகள் வணிக அடிப்படையில் மக்களிடம் அபரிமித கட்டணம் வசூலிக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்படுகிறது என்று ஆரம்பத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து, எச்சரிக்கை விடுத் தது. அது உண்மை என்பதை நிரூபிக்கும் வித மாக மாநகராட்சியின் இந்த அறிவிப்பு உள் ளது. கட்டுமா பணி முடிவடைந்து, திறப்பு விழா கண்டு, பல மாதங்களாக மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்த வாகன நிறுத்தும் வளாகத்தை, இந்த தீபாவளி பண்டிகை நெருக்கடி சமயத்தில் திறப்பது உள்நோக்கம் கொண்டது. மாநகராட்சி நிர்வாகம் விதிக்கும் அபரி மித கட்டண கொள்ளையை இந்த சூழ்நிலை யில் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மாநகராட்சி நிர்வாகம் இதைத் திணிக்கிறது. தற்காலிகமாக பயன் பாட்டுக்கு கொண்டு வருவது போல் செய்து, பிறகு நிரந்தர ஏற்பாடாக இதை மாற்றும் உள் நோக்கம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும். தீபாவளி பண்டிகை சமயம் குமரன் சாலை பகுதியில், வாகன போக்குவரத்து நெருக்க டியை சமாளிக்க வேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே மாநகராட்சி நிர்வாகத் திற்கு இருக்குமானால், வாகனம் நிறுத்த வளாகத்தை இலவசமாக பயன்படுத்த அனு மதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட் டுக் கொள்கிறோம். இவ்வாறு செ.முத்துக் கண்ணன் கூறியிருக்கிறார்.
கட்சி ஊழியரின் இழப்பு கட்சியின் இழப்பே! பி.சம்பத் உருக்கம்
கோவை, அக்.23- மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர் ஒவ்வொருவரின் இழப்பும் கட்சி யின் இழப்பு என யு.கே.சிவஞானம் படத்திறப்பில் பங்கேற்ற சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம் பத் உருக்கமாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவருமான யு.கேசிவஞானம் படத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் திறந்து வைத் தார். இதன்பின் அவர் பேசுகை யில், சோவியத் ரஷ்யாவின் வெற் றிக்குப் பின்னரே அந்த வெற்றி உல கம் முழுவதும் பரவி விடக்கூடாது என்பதை தடுக்கும் நோக்கத்திலே உலகம் முழுவதும் உள்ள முதலா ளித்துவ நாடுகளில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர் வையும் சலுகைகளையும் வழங்கி யது. சோவியத் யூனியன் வீழ்ந்த சம யத்தில் இனி கம்யூனிசத்துக்கு எதிர் காலம் இல்லை என்று ஏகாதிபத்திய சக்திகள் குதூகளித்தனர். பின்னர், தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைத்து வந்த சலுகைகள் படிப்படியாக பறிக்கத் தொடங்கினர். இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்க ளுக்கு நிரந்தர வேலை இல்லை, நியாயமான ஊதியம் இல்லை, சலு கைகள் ஏதுமில்லை என்ற நிலை யில் வேலை செய்து கொண்டிருக் கிறார்கள். ஏகாதிபத்திய நாடுகள் நினைப்பது போன்றல்ல, தற்போது உலகம் வேகமாக மாற்றமடைந்து வருகிறது. சமீபத்தில் இலங்கை யில் நடைபெற்ற தேர்தல் முடிவு கள் அதே போன்று ஐரோப்பிய நாடு கள் மற்றும் தென் அமெரிக்கா நாடு களில் நடைபெற்ற தேர்தல் முடிவு கள் இடதுசாரிகளுக்கு சாதகமாக வந்துள்ளது. இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளா னார்கள். ஆட்சியாளர்களின் ஆடம் பர ஊழல் நிறைந்த ஆட்சிக்கு முடிவு கட்டி இடதுசாரி சக்திகளை ஆட் சிக்கு கொண்டு வந்துள்ளனர். இலங் கையில் ஆட்சியாளர்களுக்கு எதி ரான மக்கள் எழுச்சியை இடதுசாரி சக்திகள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். அதுபோன்ற சூழல் அமையும் போது இடதுசாரி கட்சி கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒவ்வொரு உறுப் பினரும் முழு நேர ஊழியரும் முக் கியமானவர்கள். அவர்கள் மீது கட்சி அக்கறை எடுத்துக் கொள்வ தோடு, தோழர்களும் அவரவர் நல னில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக முக்கியம். கம்யூனிச சித்தாந் தத்தை ஏற்றுக் கண்டு பொது வாழ் வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ப வர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல அவர்கள் கட்சியின் சொத்து. கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு ஊழி யரின் இழப்பும் கட்சியின் இழப்பே. தோழர் யுகே சிவஞானம் சிறந்த களப்போராளி, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்து விடுவார் என நினைத்திருந் தோம். அவருடைய இறப்பு கட் சிக்கு பெரும் இழப்பாகும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு பெரும் முயற்சி எடுத் தும் அவரைக் காப்பாற்ற முடிய வில்லை. அவர் தனது உடல் நல பாதிப்பை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை எடுத்திருந்தால் காப் பாற்றி இருக்கலாம். யு.கே. சிவஞா னம் போன்ற மக்கள் ஊழியர்களை நாம் இனியும் இழந்து விடக்கூடாது, என்றார்.