districts

தீர்மானித்த சுங்க கட்டணம் வசூல் செய்திடுக - சிபிஎம்

ஈரோடு, ஆக. 7- அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழா வில் தற்காலிக கடைகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து வட்டாட்சியரிடம் தாலுகாச் செயலாளர் ஆர்.முரு கேசன் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், கெட்டிசமுத்திரம் கிராமம், அ.புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசுவாமி திருக்கோவில் ஆடிப்பெருந் தேர்த்திருவிழா புகழ் பெற்றது. சுமார் 600 ஆண்டுகள் பழமை யான இத்திருவிழாவாகும். இத் திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங் களிள் இருந்து லட்சக் கணக்கில்  மக்கள் வருவார்கள். இத்திருவிழா ஆகஸ்ட் 9 ஆம்தேதி முதல் 12   ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் மிகப்பெரும்  சிறப்பு என்பது பண்டமாற்றுமுறை காலம் தொட்டு நடைபெற்று வரும் கால்நடைச் சந்தைதான். இது தென்னிந்தியாவின் மிகப்பெரும் கால்நடைச் சந்தையாகும். ராஜஸ் தான் மாநிலம்,  புஷ்கரில் நடை பெறும் ஒட்டகச் சந்தைக்கு அடுத்து  இந்திய அளவில் நடைபெறும் இரண்டாவது மிகப்பெரிய கால் நடை சந்தையும் இதுதான். இச் சந்தைக்கு வரும் கால்நடைகளுக் கான சுங்க வசூலை அரசு கை விட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேசமயம் இத்திருவிழா வின் இரண்டாவது மிகப்பெரிய சிறப்பம்சம் என்பது குருநாத சுவாமி கோயில் திருவிழாவின் மிகப்பெரிய தற்காலிக கடைவீதி ஆகும். வெள்ளைப்பிள்ளையார் கோயில் அருகில் துவங்கி கிருஷ்ணாபுரம் வரையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மிக நீண்ட பல்பொருள் அங்காடிகள் அழகுற அமைக்கப்படும். இந்த கடைவீதியில் வீடுகளுக்குத் தேவையான பொருட்கள், குழந் தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் பொம்மைகள், அழகு சாதன பொருட்கள், திண்பண்டம் மற்றும் உணவக கடைகள், பாத் திரம் பீங்கான் கடைகள், பூச் செடிகள், பழங்கள், மிட்டாய் விற் பனை நடக்கும். இங்கு பொது மக்களுக்கு கிடைக்காத அத்தி யாவசிய பொருட்களே இல்லை என்கிற அளவுக்கு இந்த கடைவீதி மிகவும் பிரசித்தி பெற்றது என் றால் அது மிகையல்ல.

குருநாதசாமி கோவில் திரு விழா கடைவீதியில் ஆயிரக் கணக்கான உள்ளூர் வெளியூர் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து தங்கள் வாழ்க்கை ஜீவனம் செய் கிறார்கள். கெட்டிசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் மூலம் இந்த கடைகளுக்கான சுங்க வசூல் ஏலம்  ஒவ்வொரு ஆண்டும் விடப்பட்டு, ஏலம் எடுக்கும் ஒப்பந்ததாரர் இந்த  தற்காலிக கடை வியாபாரிகளிடம் சுங்கம் (கடை வாடகை) வசூ லிப்பது வழக்கம். கொரோனா பாதிப்பு காரண மாக மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது இந்த பெருந்திருவிழா நடைபெறுவதால் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் உற்சாகமும் மக்கள்  உள்ளங்களில் கரைபுரண்டு ஓடு கிறது. மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் கடை வியாபாரம் ஓரளவு நல்லமுறையில் நடை பெறும் என்கிற நம்பிக்கையில் இருக்கும் இந்த தற்காலிக கடை வியாபாரிகளிடம் அரசு தீர்மானித்த சுங்க கட்டணங்களை விட இந் தாண்டு பலமடங்கு கூடுதல் சுங்க  கட்டணம் வசூலிக்கபட இருப்ப தாக கவலையுடன் கூடிய பேச்சுக் கள் பரவலாக இருப்பதை அறி கிறோம். அரசு தீர்மானித்துள்ள சுங்க கட்டணத்தை விட கூடுதல்  சுங்க கட்டணம் வசூலிக்கப் பட்டால் இந்த தற்காலிக கடை வியா பாரிகள் பாதிக்கப்படுவதுடன் பொருட்களை வாங்கும் பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, திருவிழாவில் தற்காலிக கடை வியாபாரிகளிடம் சட்டப் படியான சுங்க வசூல் கட்டணத்தை (கடை வாடகையை) மட்டும் வசூல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  முன்னதாக இந்த மனுக்களை அளிக்கையில், சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி. மாரிமுத்து, தாலுகா கமிட்டி உறுப் பினர்கள் எஸ்.செபாஸ்டியன், ஆர்.கந்தசாமி ஆகியோர் சென் றனர்.