சேலம், ஜன.23- ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் வழியாக இணைய வசதி வழங்கும் திட்டத்திற்கு கண்ணாடி இழை வலையமைப்புகள் கொண்டு செல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண் டும் என சேலம் ஆட்சியர் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்திலுள்ள 385 கிராம ஊராட் சிகளிலும், இணையதள வசதி வழங் கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ் நாடு கண்ணாடி இழை வலைய மைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண் ணாடி இழை (Optical Fiber Cable) 85 சதவிகிதம் மின்கம்பங்கள் மூலமாக வும், 15 சதவிகிதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. இதுவரை சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட் சிகளில் 237 இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது. இத்திட் டத்திற்கான உபகரணங்கள், ஒவ் வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் (VPSC) அல்லது அரசு கட்டடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உப கரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய் மையாகப் பராமரிக்கப்பட்டு வருகி றது. இத்திட்டத்திற்கான உபகரணங் களை பாதுகாத்திடவும், தடை யில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிச் செயலாளர் அரசாணை யின்படி பொறுப்பாக்கப்பட்டுள் ளார். கண்ணாடி இழை (Optical Fiber Cable) 85 சதவிகிதம் ஏற்கனவே பயன் பாட்டிலுள்ள மின்கம்பங்கள் வழியா கக் கொண்டு செல்வதற்கு அர சாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் சிலர் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை (Optical Fiber Cable) கொண்டு செல்லக்கூடாது என தடை செய்கின்ற னர். இத்திட்டம் முழுமையான அர சின் திட்டம். கண்ணாடி இழை மின் சாரத்தை கடத்தாது. எனவே, இக்கண் ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட் டுள்ள மின்கம்பங்கள் வழியாகக் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது. மேலும், விளை நிலங்களில் உள்ள மின்கம்பங்களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக் கப்படும் போது, பயிர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. கண் ணாடி இழையில் எந்த விதமான உலோக பொருட்களும் இல்லை. இத் திட்டம் முழுமையாக செயல்பாட் டுக்கு வரும்போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெற முடியும். மேலும், கண்ணாடி இழைகளைத் துண்டாக் குதல், அபகரித்தல் மற்றும் மின்கம் பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.