கோவை, ஆக. 14- இயற்கையின் மீது தீராக் காதல் கொண்டு, லட்சக்கணக் கான மரக்கன்றுகளை நட்டும், மாணவர்களுக்கு மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து போதித்து வரும் கோவையைச் சேர்ந்த நடத்துநர் யோகநாதனுக்கு தில்லியில் நடைபெறும் குடி யரசுத்தலைவர் விருந்தில் பங் கேற்க அழைப்பு வந்துள்ளது. கோவை மாவட்டம், கணபதி பகுதியைச் சேர்ந்தவர் யோக நாதன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக பொது இடங்கள், அரசுப்பள்ளிகள், கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் 6 இலட்சத் திற்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்துள்ளார். மாணவர்க ளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டில் ’பசுமை போராளி’ விருதினை, அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி வழங்கி கெளரவித்தார். மேலும், தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது, டிம்பர் லேண்டின் மர மனிதன் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2015 இல் சிபிஎஸ்சி ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று சமூக பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு டெல்லியில் வியாழனன்று (இன்று) ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் ‘அட் ஹோம் வரவேற்பு’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பல்வேறு நபர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார். அதில், பங்கேற்க மரம் யோகநாதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பசுமைப்புரட்சியில் சாதனை செய்து வருவதை பாராட்டும் வகையில் யோகநாதனை குடியரசு தலைவர் நேரில் அழைத்து கெளரவபடுத்த உள்ளார். இதற்காக டெல்லி சென் றுள்ள யோகநாதன் வியாழனன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதுடன், குடியரசு தலைவர் அளிக்கும் விருந்திலும் பங்கேற்க உள்ளார். குடியரசு தலைவரால் கெளரவிக்கப்படும் யோகநாதனுக்கு பல்வேறு தரப்பின ரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வரு கின்றனர்.