districts

img

கோவை படகு இல்லத்தில் அதிக கட்டணம்

கோவை, ஏப்.26- வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்ட ணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை அமைப்பி னர் மனு அளித்துள்ளனர்.  கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் கீழ் வாலாங்குளம் குளக்கரைகள் சீர மைக்கப்பட்டு படகு இல்லம் அமைக்கப் பட்டுள்ளது. இது தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு படகு சவாரிக்கு பல்வேறு வகையான படகுகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரை  கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகம் என படகு இல்லம் அமைத்ததில் இருந்தே பொதுமக்கள் பல ரும் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், இக்கட்டணத்தை குறைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் உரி மைத்துறையினர் அதன் மாநில செயலா ளர் இமயம் ரஹ்மத்துல்லாஹ் தலைமை யில் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத் தில் மனு அளித்தனர். இது குறித்து அவர் கூறுகையில், படகு இல்லத்தில் நிர்ணயிக்கப் பட்ட கட்டணம் மிக அதிகமானது. இது ஏழை, நடுத்தர குடும்பத்தினர் இந்த கட்ட ணத்தை செலுத்த முடியாது என்பது நிதர்ச னம். மாநகராட்சி ஆணையாளர் இதில் தலை யிட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு கட்டணத்தை குறைக்கும் பட்சத் தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை  தருவார்கள். மாநகராட்சிக்கும் வருவாய் அதிகமாக கிடைக்கும். மேலும், படகு இல் லத்தை சுற்றி பார்க்கிங் வசதி முறையாக இல்லாததால், அடிக்கடி விபத்துகளும், கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதனை மாநக ராட்சி உடனடியாக முறைப்படுத்த வேண் டும், என்றார்.