districts

img

கோவை: வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி முகாம்கள்

கோவை, மார்ச் 6- கோவையில் தடுப்பூசி செலுத்த குறைந்த அளவி லான மக்களே வந்த நிலையில், சனியன்று தடுப்பூசி முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அதன்படி, கோவையில் 23ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனியன்று நடைபெற்றது. மாநக ராட்சி பகுதிகளில் 226 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெ றும். இந்த முகாமில், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி  கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனாலும், சனி யன்று குறைந்த அளவிலானவர்களே தடுப்பூசி செலுத்த வந்தனர். இதனால் பல தடுப்பூசி முகாம் கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதுகுறித்து அதி காரிகள் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதி யில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல்  தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 ஆயிரம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் 2-வது தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி உடைய வர்கள்.  எனவே, 100 சதவிகித பாதுகாப்பு பெற அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டிப்பாக உங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம் அல் லது ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவ மனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றனர்.