சேலம், ஜூன் 13- ஓமலூர் அருகே தொழிலாளர் சட்டங் களை மதிக்காமல் தொழிற்சாலை மூடப் பட்ட சம்பவத்தை கண்டித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளை குட்டை பகுதியில் இயங்கி வரும், ‘இந்தியன் மேப் கப்புள்ஸ்’ நிறுவ னத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேக் னசைட் கல்மாவிலிருந்து கப்புகள் தயாரிக் கப்படும் தொழிற்சாலையாக இந்நிறுவனம் கடந்த 8 வருட காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஆலை நிர்வாகம் தொடர்ந்து தொழிலாளர் விரோதப்போக்குடன் செயல் பட்டு, தொழிற்சங்க விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்தது.
இதைக் கண்டித்து தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அடாவடியாக 31 தொழிலா ளர்களை ஆலை நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்தனர். தற்போது ஆலையை மூடி, தொழி லாளர்களுக்கு எதிராக ஆலை நிர்வா கத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
இத னைக் கண்டித்து சிஐடியு தலைமையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அந்நிறுவ னத்தை முற்றுகையிட்டனர். இந்நிகழ்வில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கட பதி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் சேகர், ஜெயமணி, பெரியசாமி, சுரேஷ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.