கோவை, பிப்.11- கோவையில் கடந்த மாதம் மூடப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்க ளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க ஆட்சியர் தலையிட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மனு அளித்த னர். இதுகுறித்து அவர் அளித்த அம்மனுவில் கூறிய தாவது, ஃபோகஸ் எடுமேட் டிக்ஸ் நிறுவனத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வந்தனர். இதில் எஃப்எல்டி (கிங் தொழிலாளர்கள்) அடிப்படையில் சுமார் 1110 ஆர்.எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளை மையமாகக் கொண்டு பணி புரிந்து வந்தார்கள். அவர்களுக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லா மல் மின்னஞ்சல் மூலம் நிறுவனம் மூடப் பட்டது என்ற செய்தி மட்டும் அனைவருக் கும் வந்தது. ஆனால் நாங்கள் ஜனவரி மாதம் பணிபுரிந்த வேலை நேரத்திற்கான ஊதியம் என்பது முறையாக வழங்க வில்லை எங்களுக்கு சேர வேண்டிய இழப் பீடு தொகை மற்றும் நோட்டீஸ் பே சம்பந்த மாக எந்த ஒரு தகவலையும் நிறுவனம் வழங்க வில்லை. எனவே தாங்கள் தலையிட்டு பாதிக் கப்பட்டுள்ள எஃப்எல்டி ஊழியர்களுக்கு ஜன வரி மாதத்திற்கான ஊதியம் மற்றும் தொழி லாளர்களுக்கு சேர வேண்டிய இழப் பீடுகளை பெற்றுத் தர உதவி செய்ய வேண் டும் என்றனர். முன்னதாக, இந்த ஊழியர் களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா உடனிருந்தார்.