திருப்பூர், பிப்.9 - சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சிஐடியு தொழிற்சங்கம் நீண்ட போராட்டத்திற்குப் பின் பதிவு செய் யப்பட்டிருப்பதை வரவேற்று, ஊத்துக்குளியில் தொழிலாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி தாலுகா பல்லகவுண்டம் பாளையத்தில் சக்தி ஆட்டோ காம் போனென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இத்தொழிலாளர்கள் பெரும்பாலனோர் சிஐடியு சங்கத் தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த தொழிற்சாலை முன்பாக திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை வெற்றி விழா கொண்டாட்டம் நடை பெற்றது. பன்னாட்டு நிறுவனமான சாம்சங் நிறுவனம், தொழிலாளர் விரோத போக்குடன் செயல்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் அணி திரண்டனர். சிஐடியுவை ஏற்க முடி யாது என சாம்சங் நிறுவனம் முரண்டு பிடித்தது. இந்நிறுவனத்திற்கு ஆத ரவாக தொழிலாளர் நலத்துறை யும் செயல்பட்ட நிலையில், சிஐடியு வின் வலுமிக்க தொடர் போராட்ட மும், நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடி யும், சாம்சங் நிறுவனத்தில் சிஐ டியு-வை பதிவு செய்யவைத்தது. இது நாடு முழுவதும் தொழிலாளர் களை எழுச்சியூட்டும் நிகழ்வாக மாறியது. இதனையொட்டி பல் வேறு இடங்களில், தொழிலாளர் கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக பல்லக வுண்டம் பாளையத்தில் சக்தி ஆட்டோ காம்போனென்ட் நிறுவ னத்தின் தொழிலாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்நிகழ்விற்கு, சங்கத் தலைவர் ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் சி.மூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெ. கந்தசாமி ஆகியோர் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சிஐடியு தொழிற்சங்க பதிவு செய்வதற்கான போராட்டத்தைப் பற்றி விளக்க வுரை ஆற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் திரளான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். இறுதி யாக சங்க பெருளாளர் எஸ்.கே. சுந்திரமூர்த்தி நன்றி கூறினார்.