திருப்பூர், மே 14 - திருப்பூர் பொது தொழி லாளர் சங்க 27ஆவது மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பி.ஆர்.நிலையத் தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு சங்கத் தலை வர்ஏ.சண்முகம் தலைமை வகித்தார். சங்க துணைச் செயலாளர் ஜீ.வி. பாபு வரவேற்றார். இம்மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.பாலன் பேசி னார். இதைத்தொடர்ந்து சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியன் அறிக்கை முன் வைத் தார். இதையடுத்து வரவு-செலவு அறிக் கையை கிஷோர், ஜி.ராஜன் ஆகியோர் முன் வைத்தனர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினரும், மாவட்ட பொருளாளருமான ஜி.சம்பத் வாழ்த்தி பேசினார். இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தலைவராக ஏ.சண்முகம், துணைத் தலைவர்களாக கே.உன்னி கிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கிஷோர், சங்கச் செயலாளராக என் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்களாக ஜீ.வி.பாபு, ராஜேந்திரன், திருச்செல்வன், சங்கப் பொருளாளராக ஜி.ராஜன் மற்றும் ஐந்து பேர் கமிட்டி உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டின் நிறைவாக துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறி னார்.