திருப்பூர், செப். 28 - திமுக தேர்தல் அறிக்கையில் உறுதிய ளித்தபடி நலிவடையும் நிலையில் உள்ள பாத்திரத் தொழிலையும், தொழிலாளர் நல னையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள அரங்கில் புதன்கிழமை சிஐடியு பாத்தி ரத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சி.ஆறு முகம் தலைமையில் 31ஆவது மகாசபை நடைபெற்றது. இதில் சங்கச் செயலாளர் கே. குப்புசாமி அறிக்கையை முன்வைத்தார். சிஐ டியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத் தின் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி வாழ்த்திப் பேசினார். இதில், திமுக தேர்தல் அறிக்கையில் உறு தியளித்தபடி நலிவடைந்து வரும் பாத்திரத் தொழிலையும், இத்தொழிலை நம்பிப் பிழைக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களையும் பாதுகாக்க தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பாத்திரப் பட் டறை உரிமையாளர்கள் இந்த ஆண்டு தீபா வளி பண்டிக்கைக்கு முன்னதாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதல் போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
ஏற்கெனவே முன்பணமாக தொழி லாளர்கள் பெற்றிருக்கும் தொகையை போனஸ் வழங்கும்போது அதில் பிடித்தம் செய்யும் நடைமுறையைக் கைவிட்டு முழு மையான போனஸ் தொகை வழங்க வேண் டும். உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரி யத்தில் உறுப்பினர் சேர்வதற்கான நடைமு றையை எளிமைப்படுத்த வேண்டும். கடும் நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும். மின் சாரத்தைப் பயன்படுத்தி வேலை செய்யும் பாலீஸ் மற்றும் பாத்திர்த தொழிலுக்கும், பாத் திரத் தொழிலாளர்களுக்கும் மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மகாசபையில் சங்கத்தின் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தலைவர் ஏ.ஆறுமுகம், துணைத் தலைவர் கே.ரங்கராஜ், செயலாளர் கே.குப்புசாமி, துணைச் செயலாளர் கருணாமூர்த்தி, பொரு ளாளர் என்.குபேந்திரன் ஆகியோரும், 10 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும், நான்கு பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற இம்மகாசபையின் நிறைவாக சிஐ டியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் நிறைவுரை ஆற்றினார்.