districts

img

ஊழியர்களின் பிரச்சனைகள் மீது உரிய தலையீடு செய்திடுக

கோவை, ஜூன் 27- டாஸ்மாக் கடைகளையும், ஊழி யர்களையும் குறிவைத்து நடக்கும் திருட்டு. வழிப்பறி சம்பவங்கள் அதி கரித்து வரும் நிலையில். பணபெட்ட கம் மற்றும் கண்காணிப்பு கேமராக் களை அனைத்து கடைகளுக்கும்  பொருத்த வேண்டும் உள்ளிட்ட டாஸ் மாக் ஊழியர்கள் அன்றாடம் சந்திக் கும் பிரச்சனைகள் மீது உரிய தலை யீடு செய்து தீர்வு காண வேண்டும் என கோவை மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்ற டாஸ்மாக் முதுநிலை மேலாளர் ஜெயச்சந்திரனிடம் நேரில் சந்தித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் கள் மனு அளித்தனர். மேலும், அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, கோவை (தெற்கு) மற்றும் கோவை (வடக்கு) மாவட்ட டாஸ்மாக் மது பான கடைகளில் வாடிக்கையாளர் கள் அதிகம் விரும்பாத மது வகை கள் இருப்பில் இருக்கும் பட்சத்தில் மேற்படி மதுவகைகளை (90 நாட்க ளுக்கு மேல் உள்ள) திரும்பப்பெற் றிட வேண்டும், காலி பாட்டில்கள் திரும்பப்பெறுவதில், கடைகளில் இருப்பு வைப்பதில் ஊழியர்கள் பெறும் பணிச்சுமையையும், கடும் மன உலைச்சலையும் சந்தித்து வரு வதை கணக்கில் கொண்டு காலி பாட் டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி மாற்று செயல் திட்டங்களை உரு வாக்கி நடைமுறைப்படுத்திட வேண் டும். அரசின் கொள்கை முடிவின்படி மூடப்பட்ட கடைகளின் ஊழியர் களை பணிநியமனம் செய்திடும் போது, மாற்றுதிறனாளி ஊழியர்க ளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, எந் தெந்த கடைகளில் ஊழியர் பற்றாக் குறை உள்ளதோ அந்த கடைகளில் பணி அமர்த்தும்போது ஊழியர்களு டைய விருப்புரிமை அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். பல மாதங்களாக வழங்கப்படா மல் நிலுவையில் உள்ள செலவின தொகையை அந்தந்த மாத சம்பளத் துடன் வழங்கவும், கொரோனா காலத் தில் கடைகளுக்கு முன்பாக அமைக் கப்பட்ட சாமியானா, ஒலி பெருக்கி, தடுப்பு அரண்கள் உள்ளிட்டவைக ளுக்கு செலவு செய்யப்பட்ட தொகை கள் இதுநாள் வரை வழங்கப்பட வில்லை. அவற்றை விரைந்து வழங்க வேண்டும். ஊழியர்கள் நிர்வாகத்தி டம் வழங்கும் மனுக்களுக்கு உரிய ஒப்புகை சீட்டு வழங்கிட வேண்டும். போக்குவரத்து ஒப்பந்ததாரர்களே ஒப்பந்தப்படி மதுபான பெட்டிகளை இறக்கி தருவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, டாஸ்மாக் முது நிலை மேலாளராக பதவியேற்ற ஜெயச்சந்திரனுக்கு சிஐடியு கோவை மண்டல நிர்வாகிகள் வாழ்த்து தெரி வித்ததுடன், கோரிக்கை மனுவை யும் அளித்தனர். இதில், சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் மாநில நிர் வாகிகளான ஜான்அந்தோணிராஜ், செந்தில்பிரபு, கோவை மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி, பொருளாளர் ராமகிருஷ்ணன், நீலகிரி நிர்வாகிகள் ஆல்துரை, மகேஷ், நவீன், திருப்பூர் அன்பு, ஆறுமுகம், கரூர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர்.