ஈரோடு, ஜன.11- டாஸ்மாக் நிர்வாகத்தின் சட்ட விரோத மான நடவடிக்கைகளைக் கண்டித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் எஸ்கேசி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் சில்லரை மதுபான கடைகளில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றும் தொழி லாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தொழில்தாவா வழக்கு நடந்து வரும் நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக பணியிட மாறுதல் செய்ய கூடாது. ஒருதலைப் பட்சமாக குற்றமிழைத்தார் என முடிவு செய்து தண்டனைகள் வழங்குவதைக் கைவிட வேண்டும். கிடங்கு பணிக்கு மாறுதல் செய்யப்பட்டவர்கள் மூன்று மாதங் களுக்கு பிறகு விதிப்படி கடை பணிக்கு மாற்ற வேண்டும். ஆளுங்கட்சியின் தலையீடு, கட்டாய வசூல், சட்ட விரோத மதுக்கூடம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், செய லாளர் எச்.ஸ்ரீராம், சங்க பொதுச் செயலாளர் வி.பாண்டியன், சம்மேளனக்குழு உறுப் பினர் பொன்.பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பொருளாளர் கே. ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.