திருப்பூர், மே 30- தனித்துறையின் கீழ் பொது விநியோக திட்டத்தை கொண்டு வர வேண்டும் என சிஐடியு கூட்டுறவு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் சனியன்று, சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.கௌதமன் தலைமை வகித்தார். இதில், நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் சரியான எடை அளவுகளில் நல்ல தரமான சாக்கு களிள் அனுப்பப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் பொதுப்பணி நிலைத்திறன் அமைத்தல் வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நேரடியாக உதவி யாளரை நியமனம் செய்யக்கூடாது. மாவட்ட முழுவதும் தேர்வுநிலை சிறப்பு நிலை வழங்காத ஊழியர்களுக்கு உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலை பணியாளர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நுகர்வோர் கடன் வழங்க நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளருக்கு உடனடியாக நிதி பயன்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.மகேந்திரன், மாவட்ட பொருளாளர் பி.சுரேஷ், மாவட்ட துணைச்செயலாளர்கள் கே.எம்.சரவணமூர்த்தி, பி.முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ராஜேந்திரன், ஜோசப், கணேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.