districts

img

ரயில்வே விபத்து: சிஐடியு - டிஆர்இயு அஞ்சலி

ஈரோடு, ஜூன்  3- 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ரயில்வே  அச்சகங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என  வலியுறுத்தி சிஐடியு-டிஆர்இயு சங்கத்தினர் ஈரோடு ரயில்  நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தை யடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு, ரயில் விபத்தில் பலி யானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது.  பயணிகள் பயணச்சீட்டு, பயணிகள், ஊழியர்களின் படிவங்களை திறம்பட அச்சிட்டு குறித்த நேரத்தில் திறம்பட  மக்கள் சேவை செய்து வரும் 5 அச்சகங்களை மூடிவிட ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இவை கடந்த 2015 ஆம் ஆண்டு  நவீனப்படுத்தப்பட்டது. இத்துடன் ரயில்வே இடங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் நோக்கமும் இதில்  அடங்கியுள்ளது.  எனவே, ஒன்றிய அரசின் இம்முடிவுகளைக் கைவிட  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒடிசாவில் நடைபெற்ற விபத்தினால் ஆர்ப்பாட்டம்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, விபத்தில் பலியா னவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் பொது செயலாளர் வி.ஹரிலால், உதவி பொது  செயலாளர் கே.பிஜு, சிஐடியு மாவட்ட தலைவர் எச்.ஸ்ரீராம்,  ஓய்வூதியர் சங்க நிர்வாகி சி.முருகேசன், சேலம் கோட்ட செய லாளர் கே.அல்லிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.