districts

img

குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள்: கைவிட்டது ஒன்றிய அரசு; கைகொடுக்குமா மாநில அரசு?

திருப்பூர், ஜூன் 17 – ஒன்றிய பாரதிய ஜனதா அரசால் மூடப் பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட  சிறப்புப் பள்ளிகளை மாநில அரசே ஏற்று நடத்தக் கோரி தமிழக தொழிலாளர் மற்றும்  திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. கடந்த புதன்கிழமை திருப்பூருக்கு வருகை தந்திருந்த தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் சுடர் தன் னார்வ அமைப்பின் இயக்குநர் எஸ்.சி.நட ராஜ், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட  கோவை மாவட்ட திட்ட இயக்குனர் டி.வி. விஜயகுமார், ஈரோடு மாவட்ட திட்ட இயக்கு னர் சி.சுப்பிரமணியம், திருச்சி மாவட்ட திட்ட  இயக்குனர் சி.பியர்லின், திண்டுக்கல் மாவட்ட திட்ட மேலாளர் பி.மருதமுத்து ஆகி யோர் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது:  தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அதிகம் இருப்பதாக யுனிசெப் நிறு வன ஆய்வில் தெரிவிக்கப்பட்டதன்  தொடர்ச்சியாக கடந்த 1986ஆம் ஆண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர்  முறை ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டது.  14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழி லாளர்கள் மீட்கப்பட்டு அவர்களது வசிப்பி டங்களிலேயே மதிய உணவு, ஊக்கத் தொகையுடன் கல்வி வழங்க ஒன்றிய தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச் சகம் இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்ப டுத்தியது. 

பல்வேறு தொழில்களில் இருந்து மீட்கப் பட்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்கிட 22  குழந்தைகள் அடங்கிய ஒரு மையத்திற்கு 2  தன்னார்வ ஆசிரியர் பயிற்றுநர், சமையல்  உதவியாளர், எழுத்தர், இரு மையங்க ளுக்கு ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் நியமிக் கப்பட்டனர். இம்மையங்களில் பயிலும் குவந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை  மாதம் ரூ.150 வீதம் 2017ஆம் ஆண்டு பிப்ர வரி வரை வழங்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் 312 மாவட்டங்களில் இத் திட்டம் நடைபெற்று வந்த நிலையில், தமிழ் நாட்டில் 15 மாவட்டங்களில் 213 சிறப்பு பள்ளி களில் 3190 குழந்தைகள் பயின்றனர். 724 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளாக படிப்படியாக இத்திட்டத்திற்கான நிதியை  ஒன்றிய அரசு குறைத்து வந்து, கடந்த இரு  ஆண்டுகளாக முற்றிலும் நிறுத்திவிட்டது. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உத வித் தொகையும் நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் குழந் தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகளை ஒன் றிய அரசு மூடிவிட்டது. இக்குழந்தைகளை  அருகாமையில் உள்ள முறைசார் பள்ளி களில் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகள் அந்த  பள்ளிகளுக்குச் செல்லாமல் மீண்டும் பல் வேறு வேலைகளுக்குச் செல்லும் அவலம் நீடிக்கிறது.  கொரோனா காலத்துக்குப் பிறகு குழந் தைத் தொழிலாளர் எண்ணிக்கை மும்ம டங்கு உயர்ந்துள்ளது. எனவே இத்துய ரத்தைப் போக்கிட தீர்வு காணாமல் இத்திட் டத்தை மூடி இக்குழந்தைகளை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. இம்முடிவு குழந் தைத் தொழிலாளர் முறையை ஊக்குவிக் கவே செய்யும். எனவே கடைக்கோடி மக்க ளின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க குழந் தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகளை அவ ரவர் வாழ்விடத்திலேயே  நடத்திடும் வகை யில் மாநில குழந்தைத் தொழிலாளர் திட் டத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் சி.வி.கணேசன், இதை முதல்வ ரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல் வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.