தருமபுரி, மார்ச் 10- தருமபுரி மாவட்டத்திற்கு திங்களன்று (இன்று) வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தருமபுரி மாவட்டத்திற்கு திங்களன்று (இன்று) வருகை புரிந்து, அரசு கலைக்கல் லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற் கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தரு மபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட் டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இவ் விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, தரும புரி அரசு கலைக்கல்லூரியில் மேற்கொள்ளப் பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக் குநர் ரா.வைத்திநாதன், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ் குமார், முன்னாள் அமைச்சர் பி.பழனியப் பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங் கம் பெ.சுப்பிரமணி, நகர்மன்றத் தலைவர் லட் சுமி நாட்டான் மாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.