districts

உபரிநீர் கால்வாயில் ரசாயனக் கழிவுகள் கலப்பு!

சேலம், அக்.2- மேட்டூர் அணையின் உபரிநீர் கால் வாயில் ரசாயனக் கழிவுகள் கலப்ப தால், நுரையாக காற்றில் பறப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் சிட்கோ தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக் கான ரசாயன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், விவ சாயத்துக்கு தேவையான உரம், பல்வேறு வகையான ரசாயனப் பொருட் கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரசாயன ஆலைகளுக்கு என தனியாக கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் இல்லாததால், தொழிற்பேட்டை வழி யாக வரும் மழைநீர் கால்வாயில் சுத்தி கரிக்கப்படாத ரசாயனக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இந்த ரசாயனக் கழிவுகள் மேட்டூர் அணை யின் உபரிநீர் போக்கி கால்வாயில் கலந்து சங்கிலி முனியப்பன் கோயில் அருகே உள்ள காவிரியில் கலக்கிறது. அப்பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களில், குடிநீருக்காக நீருந்து நிலையங்கள் வழியாக தண்ணீர் எடுக்கும் போது, ரசாயனம் கலந்த நச்சுநீரும் செல்லும் வாய்ப்புள் ளது. மேலும், மீன்கள் இறக்கும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று சிட்கோ தொழிற்பேட் டையில் இருந்து வெளியேறிய ரசா யனக் கழிவுகள், உபரிநீர் கால்வாயில் நுரையாக பொங்கி வழிந்தன. இந்த நச்சுநுரையானது காற்று வீசும்போது அருகில் உள்ள சின்னக்காவூர், தொட் டில்பட்டி, பெரியாா் நகர், சேலம் முகாம் குடியிருப்புகளுக்கு செல்கின் றன. இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆலைகளில் இருந்து வெளியேற்றப் படும் ரசாயனக் கழிவுகளை கட்டுப்ப டுத்தாவிட்டால் போராட்டம் நடை பெறும் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.