அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபக தலைவர் கே.பி.ஜானகியம்மாள் நினைவு தினம் செவ்வாயன்று தருமபுரி செங்கொடிபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, மாவட்ட துணைச் செயலாளர் கே.சுசிலா, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.