தருமபுரி, மே 6- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 39 ஆம் ஆண்டு அமைப்பு தின விழா வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர் தலைமை வகித்தார். இதில், மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஏ.சேகர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட பொரு ளாளர் கே.புகழேந்தி, துணைத்தலைவர் சி.காவேரி, இணைச் செயலாளர் ஆர்.ஜெயவேல், மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம் சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ந.திருவேரங்கன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் அன்பரசு அமைப்பு தினவிழா கல்வெட்டை திறந்து வைத்தும், சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தும் சிறப்புரையாற்றினார்.
அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் கொடியினை மாநில பொதுச்செயலாளர் செல்வம் ஏற்றி வைத்தார். இந் நிகழ்வில், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொரு ளாளர் வி.செல்வம், மாவட்ட இணைச் செயலாளர் அமரா வதி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, வட்டக் கிளை செயலாளர் எஸ்.வடிவேல் நன்றி கூறினார். சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நடை பெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் கொடியை சி.முருகப் பெருமாளும், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க கொடியை மாநிலப் பொருளாளர் என்.திருநாவுக்கரசும், அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனம் கொடியை மூத்த தலைவர் வி.கணேஷ் சங்கரும் ஏற்றி வைத்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அஸ்தம்பட்டி அரசு மோட்டார் வாகன பராமரிப்பு துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார துறை போக்குவரத்து துறை ஊழியர் சங்க கொடியை பால வெங்கட்ராமனும், அரசு ஊழியர் சங்க கொடியை மாவட்ட இணைச் செயலாளர் என்.திருநாவுக்கரசும் ஏற்றி வைத்த னர். மேட்டூர் அரசினர் தொழிற்பயிற்சி அலுவலகத்தில் வட்ட கிளை தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் கொடியை வட்டக்கிளை துணைத் தலைவர் பழனிச்சாமியும், அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன கொடியை மாவட்ட இணைச் செயலாளர் து.சிங்க ராயன், அரசினர் தொழில் பயிற்சி மைய கொடியை முனுசாமி ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதில், சாலைப் பணியா ளர் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க வட்ட கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, வட்டக்கிளை செயலாளர் பி.கலீம் நன்றி கூறினார்.