districts

img

சிஐடியு 52 ஆவது அமைப்பு தின கொண்டாட்டம்

நாமக்கல். மே 30- சிஐடியு 52வது அமைப்பு தினத்தை முன் னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், மாணிக்க நத்தம் பகுதியில் அமைந் துள்ள விசாகா அட்டை மில், சிஐடியு தொழிற் சங்கம் கிளையில், தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி சிஐடியு வின் 52 ஆவது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலு சாமி, சங்கத் தலைவர் வேலுசாமி, கிளை செயலாளர் மணிவேல் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.  மேலும், நாமக்கல் மாவட்ட டாஸ்மார்க் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் பெருமாள் தலைமையில் சிஐடியு அமைப்பு தினத்தை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், கிளை  செயலாளர் முனியப்பன், செந்தில் செல்வம்  ஆகியோர் கலந்து கொண்டனர். ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் சங் கம் சார்பில், கிளைத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் கு.சிவராஜ், கிளை துணைத் தலைவர் புஷ்பராஜ் மற் றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

ஈரோடு

இந்திய தொழிற்சங்க மைய அமைப்பு தின கொடியேற்று விழா மற்றும் பேரவை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ர மணியன் தலைமையில் மாவட்ட செயலா ளர் எச்.ஸ்ரீராம் சங்க அலுவலகம் முன் கொடி யேற்றினார். பின்னர், நடைபெற்ற பேரவை  கூட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.ராஜேந் திரன் சிறப்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் கே.மாரப்பன் நன்றி கூறி னார்.