நாமக்கல், ஜூலை 16- தொடர் மழையால் ஆறுகள், அணைகள், ஏரிகள் நிரம்பி வருகிற நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.730 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்பதால் தற்போது 25,000 கனஅடி நீரானது காவிரி ஆற்றில் வெளியேற் றப்பட்டுள்ளது. எனவே, காவிரி ஆற்றின் கரையோர கிராமங் களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய் கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற நடவடிக்கை யில் ஈடுபடக்கூடாது. நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப் படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொது மக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவ டிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை- 101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் மற்றும் குமாரபாளையம் வட்டத்திற்கு 97869 84577, திருச்செங்கோடு வட்டத்திற்கு 94450 00545, பரமத்திவேலூர் வட்டத்திற்கு 94450 00546, மோகனூர் வட் டத்திற்கு 99524 12755, ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவ லர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிதுள்ளார்.