districts

img

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்திடுக! மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் வலியுறுத்தல்

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என, கோவையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் மாநில மாநாடு, கோவை தி கிரேன்ட் ரிஜென்ட் ஹோட்டலில் அக்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளான சனியன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், புதுகை பூபாளம் கலைக்குழு, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் நாளான ஞாயிறன்று நடைபெற்ற முதல் அமர்வில், “நலவாழ்வு உரிமை” என்ற தலைப்பில் மருத்துவர்கள் டி.சுந்தரராமன்,

திருநாவுக்கரசு, கிரிஸ்குமார். சி.கருணாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இரண்டாம் அமர்வில் “நீட் & நெக்ஸ்ட்” என்ற தலைப்பில் மருத்துவர்கள் டி.இளந்திரையன், நேருபாபு, எஸ்.காசி ஆகியோர் கருத்துரையாற்றினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற மருத்துவர் அரங்க பொதுக்குழுவில், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, அமைப்பின் கௌரவ தலைவர்களாக டாக்டர் ரெக்ஸ் சற்குனம், டாக்டர் காமராஜ், டாக்டர் சுந்தரராமன், மதிப்புறுத் தலைவராக டாக்டர் சுப்பையா, செயல் தலைவராக டாக்டர் நேருபாபு, பொதுச்செயலாளராக எஸ்.காசி, பொருளாளராக அமிர்தமணி கணேஷ் மற்றும் 31 பேர் கொண்ட நிர்வாகக்குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.