districts

இ-பாஸ் முறையை ரத்து செய்க! - கரூரில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக.25- தமிழகம் முழுவதும் இ- பாஸ் முறையை ரத்து செய்து பொது போக்குவரத்தை படிப்படியாக  கட்டுப்பாட்டு டன் அனுமதித்திட வேண்டும். ஏழை மக்களுக்கு ஆறு மாத ங்களுக்கு மாதந்தோறும் ரூ.7500  வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில்  கரூர் மாவட்டம் முழுவதும்  ஆக.20-26 வரை 100 இடங்க ளில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறுகிறது. 

க.பரமத்தி ஒன்றியம் 

கட்சியின் க.பரமத்தி   ஒன்றிய குழு சார்பில்  பவித்திரம் கடைவீதி யில்கிளைச் செயலாளர் ரா. பழனி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.கந்தசாமி சிறப்பு ரையாற்றினார். கரூர் நகரக் குழு சார்பில் வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலை முன்பு கிளை செயலாளர் தியாக ராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் எம்.ஜோதி பாசு கண்டன உரையாற்றி னார்.