பொள்ளாச்சி, ஜூலை 20- வால்பாறையிலிருந்து கேரளாவிற்கு சென்று கொண் டிருந்த அரசு பேருந்து போக் குவரத்து சேவை சில வருடங் களாக நிறுத்தி வைக்கபட்டி ருந்தது. இந்நிலையில், தமி ழக அரசின் உத்தரவால் புத னன்று பேருந்து சேவை மீண் டும் துவங்கப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறையிலிருந்து கேரள மாநி லம், சாலக்குடிக்கு சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணங்களால் இப்பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட் டது. இந்நிலையில், தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவ சங்கரிடம், வால்பாறையிலிருந்து கேரள மாநிலம், சாலக் குடிக்கு மீண்டும் போக்குவரத்து சேவை ஏற்படுத்தக்கோரி வால் பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் கேரள மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து புதனன்று வால் பாறையிலிருந்து கேரள மாநிலம், சாலக்குடிக்கு மீண்டும் பேருந்து சேவை துவங்கப்பட்டது. இதற்கு வால்பாறை மற் றும் சாலக்குடி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.