கோவை, டிச.11- ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் பிஎஸ்என் எல் தமிழ்நாடு மாநில நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு முழு வதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் சேவைகளை சீர்படுத்த வேண்டும். அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். களவு போகும் பிஎஸ்என்எல் சொத்துக்களை மீட்டெடுக்க முறையான நேர் மையான முயற்சிகளை எடுத்திட வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மீது காழ்புணர்ச்சியுடன் நடந்து கொள் ளும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில முழுவ தும் அனைத்து மாவட்டங்களிலும் பிஎஸ்என்எல் ஊழியர் கள் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதி யாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் டிஜி எம் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் சௌ.மகேஸ்வரன், மாநில சங்க நிர் வாகி சசிகுமரன், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் குடியரசு, பிஎஸ்என்எல் ஒப் பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அப்துல் முத்த லிப்பு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.