districts

img

ஏப்ரல் 5- தில்லியில் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி

ஈரோடு, மார்ச் 27- புதுடெல்லியில் ஏப்ரல் 5  ஆம் தேதி நடைபெற உள்ள  பேரணியின் நோக்கங்கள்  குறித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், ஒப்பந்த  ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு மாநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தனியார் தொலைத்தொடர்பு நிறுவ னங்கள் 5 ஜி மொபைல் சேவை வழங்கி வரும்போது, அரசு பொதுத்துறை நிறுவன மான பிஎஸ்என்எல்லுக்கு 4 ஜி சேவை கூட  ஒன்றிய அரசு வழங்கவில்லை. அதற்கான கருவிகள் வெளிநாட்டில்தான் வாங்க வேண்டும் என்ற நிலையில், அதற்கு ஒன்றிய  அரசு அனுமதி மறுத்து வருகிறது. இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்க வேண்டும் என்கிற திட்டமிட்ட ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கையால், வாடிக்கையாளர்கள் வெளியேறி பிஎஸ்என்எல் நிறுவனத்தை நட்டத்திற்கு தள்ளியுள்ளது. இந்நிறுவனத்தில் வேலை செய்து வந்த  80 ஆயிரம் பேரை விருப்ப ஓய்வு என வீட்டிற்கு  அனுப்பியது. ஒப்பந்த ஊழியர்கள் பெரும்  பகுதியினரை, நிறுத்திவிட்டது. ஊழியர்கள்  இல்லாமல் பிஎஸ்என்எல் எப்படி சேவை யளிக்கும். விடுதலைக்குப் பிறகு உணவு பொருட்கள் மீது வரி ரத்து செய்யப்பட்டது.

ஆனால், தற்போது ஒன்றிய அரசு அரிசி, கோதுமை மேல் 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதித்துள்ளது. எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்கிறது, போராடிப் பெற்ற  தொழிலாளர் நல சட்டங்களை, முதலாளி களுக்கு ஆதரவாக திருத்துகிறது உள்ளிட்ட  மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை அம்பலப்படுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  ஈரோடு மாநகரில் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன் தொடங்கிய இயக்கத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் தலைவர் பி.சின்னசாமி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர்  எச்.ஸ்ரீராம், பிஎஸ்என்எல்இயு மாநில அமைப்பு செயலாளர் செல்வராஜ், மாநில  துணை தலைவர் என்.குப்புசாமி, டிஆர்இயு  சேலம் கோட்ட துணை செயலாளர் பிஜு,   ஏஐபிடிபிஏ மாவட்ட தலைவர் மாணிக்கம், சிஐடியு மாநில முன்னாள் துணை பொது செயலாளர் ப.மாரிமுத்து, ஏஐபிடிபிஏ பொரு ளாளர் வி.மணியன், சிஐடியு பி.சுந்தர ராஜன்,  பிஎஸ்என்எல்இயு மாவட்ட செயலாளர் பாலு,  அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜய் மனோகரன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.