districts

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மே 19- பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு டெலிபோன் பவன் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களின் சம் பள நிலுவை, இஎஸ்ஐ, இபிஎப் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி புதன்கிழமை ஈரோடு டெலிபோன் பவ னில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு கிளைத்தலைவர் ஏ.அருண்குமார் தலைமை  வகித்தார். ஆர்.அகமது பாட்சா, கண்ணப்பன், மாவட்ட செய லாளர் கே.பழனிச்சாமி, மாவட்ட தலைவர் ஆர்.தம்பிக்லை யான்,  மாவட்ட அமைப்பு செயலாளர் சி..பரமசிவம் ஆகி யோர் கலந்து கொண்டனர். இறுதியாக கிளை பொருளாளர் கே.ஈஸ்வரன் நன்றி கூறினார். முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.