districts

img

தொழிலாளர் விரோத பாஜக அரசை வீழ்த்துவதே நமது இலக்கு ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் தின கூட்டத்தில் பி.ஆர்.நடராஜன் எம்பி.,சூளுரை

கோவை, நவ. 11- கார்ப்ரேட்டுகளுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு, இந்திய உழைப் பாளி மக்களை தெருவில் நிறுத்திய, தொழிலாளர் விரோத ஒன்றிய மோடி அரசை வீழ்த்துவதே தொழிலாளி வர்க் கத்தின் பெரும் கடமை என்பதை உணர்ந்து 2024ல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என ஸ்டேன்ஸ் மில் தியாகி கள் தின நினைவேந்தல் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  தொழிலாளிகளின், உழைப்பு சுரண் டலை தடுப்பது, கூலி, பெண் தொழிலா ளர்களின் கௌரவம் என்கிற கோரிக் கையை முன்வைத்துத்தான் ஸ்டேன்ஸ்  மில்லில்  செங்கொடி சங்கம் அமைக்கப் பட்டது. உரிமைகளுக்கு குரல் கொடுத்த தால், தொழிலாளர்கள் பழிவாங்கப்பட் டனர். நீதி கேட்ட போராட்டத்தில், 1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இப்போராட்டத்தை ஒடுக்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 தொழிலாளர்கள் தங்களது உயிரை நீத்ததாக காவல்துறை பட்டி யல் அறிவித்தது. உண்மையில், 15 க் கும்  மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள்  என்பதும், ஐந்து பேரின் அடையாளங் கள் தெரியவில்லை என்பதுமே அன் றைய பேசு பொருளாக இருந்தது. இந்த  துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண் தொழிலாளர்களும் இறந்தனர். இதில்,  நிறைமாத கர்ப்பிணியான பாப்பம்மாள் மிதி பட்டு இறந்ததும் மற்றும் அம்மு கோபால் தொண்டைக்குழியில் துப் பாக்கி குண்டு துளைத்தது என்பது ஸ்டேன்ஸ் மில் போராட்ட வரலாற்றின் சுவடாகும். உழைப்பாளிகளின் உரி மைக்காகவும், செங்கொடி சங்கம் காக் கும் போராட்டத்தில் உயிர் நீத்த தியா கிகளுக்கு ஆண்டுதோறும் சிஐடியு சார் பில் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகி றது.  இதன்தொடர்ச்சியாக, சிஎஸ் &   டபிள்யூ பஞ்சாலை முன்பு ஸ்டேன்ஸ்  மில் தியாகிகள் தினம் சனியன்று   அனு சரிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு, சிஐடியு  கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங் கத்தின் துணைத்தலைவர் ராமகிருஷ் ணன் தலைமை ஏற்றார். சிஐடியு சங் கத்தின் கொடியை மின் ஊழியர் மத்திய  அமைப்பின் சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் ஏற்றி வைத்து, தொழிலாளி வர்க்கத்திற்காக செங்கொடி சங்கத்தின் தியாகங்கள் குறித்தும், இன்றைய மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார். 

இதில், சிஐடியு பஞ்சாலை தொழி லாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாநில செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தியாகத்தால் சிவந்த கோவை மாவட் டத்தின் வர்க்க போராட்ட வரலாறு குறித்து உரையாற்றினர்.  முன்னதாக பி.ஆர்.நடராஜன் எம்பி., பேசுகையில், தியாகத்தை மட் டும் தான் பெருமைப்படுத்த முடியும், துரோகம் ஒருபோதும் நினைவில் நிற் காது. பல வருடங்களுக்கு பிறகு ஸ்டேன்ஸ் மில் போராட்டத்தில் உயிர்  நீத்த தியாகி அம்மு கோபாலின் பேத்தி  தனலட்சுமியையும் அவரது குடும்பத்தி னரையும் கண்டறிந்துள்ளோம். இது போன்ற எண்ணற்ற தியாகிகளின் குடும் பத்தினரை கண்டறிகிற பணியை நாம்  மேற்கொள்ள வேண்டும். திமுக அரசு  மொழிப்போர் தியாகிகளை கௌரவிப் பதைப்போல, மார்க்சிஸ்ட் கட்சி தலை மையிலான அரசு அல்லது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு நிச்சயம் அமையும். அப்போது உழைக்கும் வர்க்கத்திற்காக உயிர்  நீத்த தியாகிகளை கௌரவப்படுத்து வேம்.  8 மணி நேர வேலையை 10 மணி  நேரமாக மாற்றும் முயற்சிக்கு எதிராக நடைபெற்றது தான் ஸ்டேன்ஸ் மில்  போராட்டம்.  சங்கம் சேர வேண்டிய உணர்வை ஊட்டியவர்கள் ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள்தான். அத்தகைய வரலாறு கோவை மாவட்டத்திற்கு மட் டும்தான் உண்டு. தற்போதுள்ள ஒன்றிய  பாஜக அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு   பங்களாதேஷில் இருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறது. அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட பஞ்சாலைகளை மூடிவிட்டு  தொழிலாளர் விரோத அரசாக தங்களை  பிரகடனப் படுத்திக் கொள்கிறது. இத் தகைய பாஜக அரசை 2024 ஆம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப் பது மட்டுமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். வர்க்க துரோகிகள்  அரசை அப்புறப்படுத்த, தேர்தல் வாய்ப் புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் ஆசிரி யர்களுக்கு பெண் தர மறுத்தனர். ஆசி ரியர்களை விட பஞ்சாலைத் தொழி லாளர்கள் அதிகம் ஊதியம் பெற்றனர், இப்போது அனைத்தும் மாறிவிட்டது. சமீபத்தில்கூட வேலை நேரத்தை அதி கப்படுத்த சட்டம் கொண்டுவர முயற்சித் தனர். நமது ஒன்றுபட்ட போராட்டங்க ளின் காரணமாக பின்வாங்கியுள்ளனர். எனவே, தொழிலாளி வர்க்கம் எப்போ தும் விழிப்புணர்வோடு இருக்க வேண் டிய அவசியம் உள்ளது என்றார். முன்னதாக, ஸ்டேன்ஸ் மில் துப்பாக் கிச்சூட்டில் உயிர் நீத்த அம்முகோபால் அவர்களின் பேத்தி தனலட்சுமி கேர ளம் மாநிலம் பாலாக்காட்டில் வசித்து  வருவதும், இவர் மின் ஊழியர் மத்திய  அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பெரியம்மாள் மகள் என்பது தெரியவந்ததையடுத்து, அம்முகோபாலின் பேத்தி தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை தியாகி கள் தினத்திற்கு வரவழைத்த மில் தொழி லாளர் சங்கத்தினர், அவர்களை கௌர வப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அவிநாசி மேம்பாலத்தில் இருந்து ஊர்வலமாக ஸ்டேன்ஸ் மில் வாயிலின் முன்பு நிறைவடைந்து நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில்,  திரளானோர் பங்கேற்றனர்.