districts

img

அரூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்

தருமபுரி, ஜன.1- அரூரில் புத்தகத் திருவிழா வெள் ளியன்று துவங்கியது. தருமபுரி மாவட்டம், அரூரில் தகடூர் புத்தகப் பேரவை, அரூர் அரிமா சங் கம், அழகு அரூர் காப்போம் அறக்கட் டளை சார்பில் புத்தகத் திருவிழா வெள் ளியன்று துவங்கியது. இந்த புத்தகத் திருவிழாவிற்கு அரிமா சங்க தலைவர்  எம்.வெங்கடாசலம் தலைமை வகித் தார். அழகு அரூர் காப்போம் அறக்கட் டளையின் பொருளாளர் எஸ்.தீபக் குமார் வரவேற்புரையாற்றினார். புத்த கக் கண்காட்சியை அரூர் அம்மன் கிரா னைட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முத்து ராமசாமி தொடக்கி வைத்தார். முதல் விற்பனையை கோட்டாட்சியர் வே.முத்தையன் தொடக்கி வைத்தார்.

இதில், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர் பாத்திமா, வட்டார மருத் துவ அலுவலர் இரா.தொல்காப்பி யன், தகடூர் புத்தகப் பேரவையின்  தலைவர் இரா.சிசுபாலன், செயலா ளர் ரா.செந்தில், மாவட்டக் கல்வி அலு வலர் வ.ரவி, அரிமா சங்க செயல் தலை வர் வே.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புத்தகத் திருவிழாவில் கவிதை, கட்டுரைகள், வரலாறு, இலக் கிய நூல்கள், பொது அறிவு புத்த கங்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்பட 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் இடம் பெற் றுள்ளன. இத்திருவிழாவில் பள்ளி மற் றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர் கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர் கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி சென் றனர். இந்த புத்தக திருவிழா ஜன வரி 2 ஆம் தேதி (திங்கட்கிழமை)  வரை நடைபெறுகிறது.