districts

img

திரிபுராவில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக, ஆர்எஸ்எஸ்

திரிபுராவில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பலை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை ஏற்றார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, நாகராசன், சோ. அருச்சுணன், எஸ்.கிரைஸாமேரி, மூத்த தலைவர் பி.இளம்பரிதி, நகர செயலாளர் ஆர்.ஜோதி பாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.