districts

img

மரங்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

சேலம், செப்.8- சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில், உலக லயன்ஸ் கிளப் அமைப்பின் சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு 23 மரங் கள் நடப்பட்டது. தொடர்ந்து  அந்த மரங்களை லயன்ஸ் சங்கம் பராம ரித்து வந்தது. ஒவ்வொரு வெள்ளியன்று அனைத்து மரங்களுக்கும் மலர் தூவி மரி யாதை செய்து வந்தனர். இந்நிலையில், அந்த மரங்களுக்கு 14  வயது நிறைவடைந்துள்ளதையடுத்து, பிறந்தநாள் விழா வெள்ளியன்று கொண் டாடப்பட்டது. இதில் அரிமா சங்க நிர்வாகி கள் கே.பி.சேகர், ரங்கசாமி ஆகியோர் கலந்து  கொண்டு, மரங்களுக்கு மலர்தூவி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண் டாடினர். அப்போதைய மாவட்ட சந்திர குமாரின் ஆலோசனையின்படி 23 மரங்கள் நடப்பட்ட நிலையில், தற்போது வளாகம் முழு வதும் 223 மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப் பட்டு வருது குறிப்பிடத்தக்கது.