districts

img

பாரதி புத்தகாலய புதிய விற்பனை மையம் திறப்பு

கோவை, ஜூலை 30- பாரதி புத்தகாலயத்தின் புதிய விற் பனை மையம் திறப்பு விழா திங்களன்று  கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலை யத்தில் நடைபெற்றது. இடதுசாரி கருத்துக்களை உழைப் பாளி மக்களிடம் பரவலாக கொண்டு  செல்லும் வகையில் பாரதிபுத்தகலா யம் என்கிற பதிப்பகம் உருவாக்கப்பட் டது. இது தனது வேரை படறவிட்டு தமிழ கம் முழுவதும் கிளை பரப்பி வருகி றது.  இதன்தொடர்ச்சியாக, கோவை  சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தி னுள் புதிய விற்பனை மையம் திறக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பாரதி புத்த காலயம் வி.சுரேஷ் தலைமை ஏற்றார்.  பொது பள்ளிக்கான மாநில மேடை வி. தெய்வேந்திரன் வரவேற்புரையாற்றி னார். விற்பனை மையத்தை பாரதி புத்த காலயத்தின் முதன்மை பொது மேலா ளர் கே‌.நாகராஜ் திறந்து வைத்தார். முதல் விற்பனையை எழுத்தாளர் நாஞ் சில் நாடன் தொடங்கி வைத்தார். புத்த கத்தை தமுஎகச மாவட்டத் தலைவர் தலைவர் தி.மணி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், கண்ணனின் மோகன் ஸ்வீட்ஸ் உரிமையாளர் வி.ஆர்.வெங் கடேஷ், சிறுகுறு தொழில் கூட்டமைப் பின் செயலாளர் கே.பாண்டியன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத் மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், கே.அஜய்குமார், கே.மனோகரன் உள்ளிட்ட திரளானோர்  பங்கேற்றனர்.