நாமக்கல், அக்.1- மாற்றுத்திறனாளியை அலைக்க ழிக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்று வங் கியின் முன்பு காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பெரியமணலி கிராமம் பழக்காரன்காட்டில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி துரைசாமி. இவர், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பித்துள்ளார். இதற்கு வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்று ஊராட்சியின் மூலம் தெரிவிக்கபட்டுள்ளது. வங்கி கணக்கு துவங்கப்பட்டு ஆதார் எண் இணைப் பிற்கு அந்த மாற்றுத்திறனாளியை பல முறை வங்கி நிர்வாகம் அலைகழித் துள்ளது. வங்கியில் தேவையான ஆவணங் களை பூர்த்தி செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்த போது ஆதார் மேப் வேண்டும் என்று திருப்பி அனுப்பியுள்ளனர். வங்கிக்கு சென்று கேட்டால் இது தான் ஆதார் மேப், இதற்கு மேல் நாங்கள் தர முடியாது என்று வங்கியில் கூறியுள்ள னர். இதனால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி பெரும் சிரமத்தில் பரிதவித்து வந்தார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரியமணலி கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர் வாகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியச் செயலாளர் வீ.தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பெரிய மணலி ஊராட்சி மன்றத் தலைவர் சேகர், இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, போராட்டத்தை ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.