districts

img

வாழையிலை வியாபாரிகள் சங்கம் அமைப்பு

ஈரோடு, ஜன.4- பவானி தாலுகா வாழையிலை வியாபாரிகள் சங்க  அமைப்புக் கூட்டம் ஒரிச்சேரியில் வெள்ளியன்று நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா வாழை யிலை வியாபாரிகள் சங்கம் அமைப்பு கூட்டம் ஒரிச் சேரி ஓம் காளி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு, எஸ்.எஸ்.எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.மாணிக்கம்  கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இக்கூட்டத்தில்,  சங்கம் அமைத்து வியாபாரிகளிடம் ஒப்பந்தம் மூலம்  இலை வியாபாரம் செய்வது; இலைகள் வேறு மாவட்டங் களுக்கு கொண்டு செல்லும்போது அதனால் ஏற்படும் இழப்புகள் உள்ளிட்டவைகளை சங்கம் மூலம் தீர்வு காண்பது; அவரவர் பிடித்துள்ள இலை வெட்டும் காட் டையும், கடையிலும் மற்றவர்கள் சென்று இடையூறு செய்யக்கூடாது. தொழிலாளர்களுக்கு, கடைவியா பாரிகள் சுழற்சி முறையில் வேலை வழங்க  வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதனைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக தன பால், செயலாளராக மாதேஸ்வரன், பொருளாளராக எஸ்.எஸ்.எஸ்.செல்வராஜ் மற்றும் 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பவானி தாலுகா பொதுத்தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜெகநாதன் நிறைவுரையாற்றினார். முடி வில், தினேஷ் நன்றி கூறினார்.