districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: மீண்டும் பதட்டம்

நாமக்கல், அக்.15- நாமக்கல் அருகே 2000 வாழை மரம், 200 பாக்கு மரங் களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த் துள்ளது மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்  பாளையம் அருகே கடந்த மார்ச் 11-ஆம் தேதியன்று  இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து  படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, பல்வேறு  வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில்,  உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய சங்கத்தினர் கோரிக்கை  விடுத்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், பரமத்தி வேலூர் தாலுக்கா, கொத்த மங்கலத்தில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான சுமார்  2 ஏக்கர் விவசாய தோட்டம் உள்ளது. சனியன்று இரவு தோட்டத்தில் இருந்த சுமார் 1750 வாழை மரங்களை அடை யாளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதன் அருகே  இருந்த வக்கீல் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான 200 பாக்கு மரங்கள், 250 வாழை மரங்களையும் அடை யாளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த்தனர். வழக்கம்  போல தோட்டத்திற்கு வந்த தர்மலிங்கம் தோட்டத்தில்  இருந்த வாழை மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை  கண்டு அதிர்ச்சியடைந்து, ஜேடர்பாளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார் . இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜேஷ் கண்ணன், திருச்செங்கோடு சார் ஆட்சியர்  சுகந்தி, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கலைச்செல்வி ஆகி யோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். இதையடுத்து, தடவியல் நிபுணர்கள் அந்தப் பகுதியில் உள்ள தடயங் களை சேகரித்து வருகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு

கோவை, அக்.15- குடிநீர் பிரச்சனையால் தனியார் மகளிர் கல்லூரி விடுதி  மாணவிகளுக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கோவை - அவிநாசி சாலை, பீளமேடு அருகில் தனியார்  மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் மாணவி களுக்கான விடுதி ஹோப்ஸ் சிக்னல் அருகே உள்ளது. இந் நிலையில், விடுதியில் மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, விடுதி காப்பாளர்கள், மாணவிகளை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். 30-க்கும் மேற்பட்ட மாணவி கள் சிகிச்சை பெற்று உடனே விடுதி திரும்பினர். இந்நிலையில், குடிநீரில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக  இருக்கலாம் என்பதால் மாநகராட்சியிடம் புகார் தெரிவிக் கப்பட்டு உள்ளதாகவும், கல்லூரியில் முறையாக சுத்தி கரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை  உறுதி செய்கிறோம் என கல்லூரி தரப்பில் விளக்கம் அளித் துள்ளனர். இதைத்தொடர்ந்து, கல்லூரியில், மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

கண்களை பத்திரமாக பாத்துக்கோங்க விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை, அக்.15- உலக பார்வை தினத்தை முன்னிட்டு, ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம் சார்பில் கோவையில் பணியி டத்தில் பார்வையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் ஞாயிறன்று நடைபெற்றது. உலக பார்வை தினம் (WSD) ஒவ்வொரு ஆண்டும்  அக்.12 தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக  “பணிபுரி யும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்”  என்ற தலைப்பு  வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, “ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம்” சார்பில் கோவையில் “பணிபுரியும் போதும் உங்கள்  கண்களை நேசியுங்கள்” என வாக்கத்தான் பந்தைய சாலை  பகுதியில் நடைபெற்றது. இதனை, கோவை மாநகர  காவல் துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர் மதுசுதன் ஆகியோர் துவக்கி  வைத்தனர். பந்தையசாலை பகுதியில் 2.5 கிலோ மீட்டர்  தூரத்திற்கு இந்த வாக்கத்தான் நடைபயணம் நடை பெற்றது. ஆப்டோமெட்ரிக் அமைப்பின் நிர்வாகிகள்  அருள், குமரன், சமூவேல் விஜய், சாமுவேல் மற்றும்  கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவை, அக்.15- கோவையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 4 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கோவை, ஆர்.எஸ்.புரம் போலீசார் வெள்ளியன்று ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிரியன் சர்ச் சாலை யில் சந்தேகம் படும் படி நின்றிருந்த இளைஞரிடம் விசாரித் தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை  சேர்ந்த ஓட்டல் ஊழியர் அஸ்வின் (21)என்பவரை கைது  செய்தனர். அவரிடம் இருந்து 1.150 கி.கிராம் கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல், வடவள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அடுக்குமாடி குறியிருப்பு பகுதியில் நின்றி ருந்து, 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள்  முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து,  சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா  விற்பனையில் ஈடுபட்ட வடவள்ளியை சேர்ந்த விக்னேஷ்  (22), ஓட்டுநர் சூர்யா (20), கூலி தொழிலாளி அஜித்குமார்  (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  1.150 கி.கிராம் கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு  கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர்  போலீசார், 3 பேரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில்  அடைத்தனர். 

ஒன்றரை கோடி ரூபாய்க்கு மாடுகள் ஏலம்'

ஈரோடு, அக்.15- பெருந்துறை அருகே நடைபெற்ற மாச்ட்டுச்சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மாடுகள் ஏலம் போனதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள சீனா புரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது. இதில் தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலிருந்து மாடுகள் விற்ப னைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 110, இதே இன கிடாரிக்கன்றுகள் 120, சிந்து  மற்றும் ஜெர்சி இன கறவை மாடுகள் 130 இதே இன கிடாரி  கன்றுகள் 150 ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்பட் டன. சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம் வரை விற்றது. இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற் பனையானது. சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி  கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும்  விற்பனையானது. மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மாடு கள் விற்பனையாகி இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்த னர்.

மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

தருமபுரி, அக்.15- காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் பாதிப்புகளை தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக, பலர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கிராமம் முதல் நகரம் வரை செயல்படும் தனியார் மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங் கள், வட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனை கள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என அனைத்திலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வரு வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலம் என்பதாலும், குளிர்ச்சியான காலநிலை நிலவு வதாலும் காய்ச்சல், சளி பாதிப்புகள் பலரையும் பாதித்து வரு கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகை யில், மழைக் காலத்தில் வேகமெடுக்கக்கூடிய சில நோய் களை, பரப்பும் வைரஸ்கள் சூழல் காரணமாக பல்கிப் பெருகு வதால் பலரும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்குள்ளா கின்றனர். இந்த சிரமங்களை தவிர்க்க, குடிநீரை காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும். முடிந்தவரை சூடான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். கூட்டம் அதிகமுள்ள இடங்க ளுக்கு செல்லும்போதும், பேருந்துகள் போன்ற பொது போக் குவரத்து முறைகளில் பயணிக்கும்போதும் முகக்கவசத்தை  பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாக பரா மரிக்க வேண்டும். குறிப்பாக, நோய் பரப்பும் கொசுக்களின்  உற்பத்திக்கு, இருப்பிடத்தைச் சுற்றி தண்ணீர் தேங்குவதே முக்கிய காரணமாக இருக்கிறது. காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், சுய மருத்துவத்தை தவிர்த்து, மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும், என அறிவுறுத்தியுள்ளளனர்.

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை

ஈரோடு, அக்.15- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பய ணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கின்ற னர். இந்நிலையில், சனியன்று இரவு சத்திய மங்கலம், கோபி செட்டிபாளையம், நம்பியூர் கொடிவேரி மற்றும் சுற்று வாட்டார பகுதி களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி  தீர்த்தது. இதனால் கோபி, நம்பியூர் பகுதி களில் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகள வில் செல்கிறது. இதேபோல் கொடிவேரி நீர்ப்பிடிப்பு பகு திகளிலும் சனியன்று இரவு முதல் விடிய  விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.  ொடிவேரி தடுப்பணையில் 1200 கனஅடி யாக நீர்வரத்து அதிகரித்து செல்கிறது. இத னால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரை களையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெ டுத்து ஆர்ப்பரித்து செல்கிறது. இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணி கள் ஞாயிறன்று குளிக்க தடை விதிக்கப்பட் டது. நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை  பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணை யில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. நீர் வரத்து குறைந்த பின் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோரிக்கை

தருமபுரி, அக்.15- பாலக்கோட்டிலுள்ள பிரசித்திபெற்ற கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஶ்ரீபுதூர்மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 12  கிராமங்களிலிருந்தும் நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்ற னர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி  மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்து ஏரா ளமானோர் வந்து செல்லும் சுற்றுலா தலமாக இக்கோவில் உள்ளது. ஆனால், இக்கோவில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிவறை இருந்தும் பெயரள வில் மட்டுமே இருகின்றன. பொது கழிவறை எப்போதும் மூடி உள்ளதாகவும், மழைக்கா லங்களில் கோவில் வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கோவி லில் மின்விளக்கு கம்பம் மட்டுமே உள்ளதாக வும், பழுதான மின்விளக்கை சரிசெய்யப்படா மலேயே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம்  துரித நடவடிக்கை மேற்கொண்டு மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

540 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

தருமபுரி, அக்.15- ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு, தருமபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீ சார், உதவி காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் தரு மபுரி - அரூர் மெயின் ரோடு, செம்மனஹள்ளி பகுதியில் வாக னச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த  காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 18 மூட்டை களில் 540 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட செம்மனஹள்ளி பகு தியைச் சேர்ந்த கதிரவன் (42) என்பவரை கைது செய்து, சிறை யில் அடைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 540 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங் கில் ஒப்படைக்கப்பட்டது.

இரவு ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் காவல் அதிகாரிகளுக்கு சேலம் எஸ்.பி உத்தரவு

சேலம், அக்.15- இரவு நேர ரோந்து பணியை அதிகரித்து, குற்றங்கள் நடக் காமல் தடுக்க வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில், காவல் அதிகாரிகளுக்கான குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பா ளர்கள் கண்ணன், செல்வம், துணை காவல் கண்காணிப்பா ளர்கள் சங்கீதா, நாகராஜன், ராஜா, மரியமுத்து, ஹரிசங்கரி,  அமலஅட்வின், தமிழ்வாணன், சின்னசாமி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு பணியில் காவல் அதிகாரி கள் தீவிரமாக செயல்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில், விரைந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை  பெற்றுக்கொடுக்க வேண்டும். இப்பணியை அந்தந்த காவல்  நிலைய ஆய்வாளர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண் டும். நிலுவையில் இருக்கும் காணாமல் போனவர்கள் வழக்கு களை மீண்டும் விசாரித்து கண்டறிய வேண்டும். உட்கோட்ட பகுதிகளில் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வை யில் இரவு ரோந்து பணியை அதிகரித்து, குற்றங்கள் நடக்கா மல் தடுக்க வேண்டும். காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் மக்க ளிடம் மிக கனிவாக பேசி, அவர்களின் பிரச்சனையை கேட்ட றிந்து உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து, கடந்த மாதத்தில் பல்வேறு குற்ற வழக்கு களில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த  காவல் அதிகாரிகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அருண்கபிலன் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.