districts

img

மீண்டும் ஊருக்குள் புகுந்த பாகுபலி யானை

மேட்டுப்பாளையம், ஏப்.30-  மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி என்றழைக்கபடும் ஒற்றை ஆண் காட்டு யானை மீண்டும் குடி யிருப்பு பகுதிகளில் உலா வரத் துவங்கியுள்ளதால் வனத்துறையி னர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். வனத்தை விட்டு வெளியேறி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையத்தில் உள்ள குடி யிருப்பு பகுதிகளில் சுற்றி வந்து, விளை நிலங்களுக்குள் புகுந்து விவ சாய பயிர்களை சேதப்படுத்தி வந் தது பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டுயானை. இயல்பை மீறி பிற யானை கூட்டங்களோடு இணையா மலும், எத்தனை முறை விரட்டினா லும் அடர்ந்த காட்டுக்குள் செல்லா மல் மீண்டும் மீண்டும் ஊருக்குள் திரும்பி வருவதையே வாடிக்கை யாக கொண்டுள்ளது இந்த பாகுபலி யானை. ஆகவே இதனை சுற்றி  வளைத்து பிடித்து மயக்க ஊசி செலுத்தி அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தி காட்டுக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்ட னர். இதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வாரத்தில் டாப்சிலிப் முகாமிலிருந்து மாரியப்பன், கலீம், வெங்கடேஷ் என மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

 இதையடுத்து கும்கிகள் உதவி யோடு பாகுபலியை பிடிக்க 80க்கும் மேற்பட்ட வனத்துறையினர் நிய மிக்கப்பட்டு, அவர்கள் பல குழுக்க ளாக பிரித்து அந்த ஒற்றை யானையை சுற்றிவளைக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ  குழுக்களும் தயார் நிலையில் இருந்த நிலையில் பாகுபலி யானை யாருக்கும் பிடிபடாமல் மிக சாதுர்ய மாக தப்பியபடி இருந்தது. மேலும், தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி கொண்டதோடு, துப்பாக்கி மூலம் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டும் அதிலிருந்து தப்பியது. வனத்துறையினரின் திட் டத்தை புரிந்து கொண்டது போல்  ஒரு கட்டத்தில் யார் கண்களுக்கும் சிக்காமல் அடர்ந்த காட்டுக்குள் சென்று பதுங்கியது பாகுபலி யானை. இதனால் ஒரு மாத காலம் முயன்றும் முடியாமல் ‘ஆப்பரேசன் பாகுபலி’ தோல்வியில் முடிவுற் றது. இதனை பிடிக்க வந்த கும்கி  யானைகளும் ஜூலை மாத இறுதி வாரத்தில் திருப்பி அனுப்பபட்டன.  இந்நிலையில் சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து தற்போது மீண் டும் மேட்டுப்பாளையத்தினுள் நுழைந்து வழக்கம் போல் ஊருக் குள் உலா வர துவங்கியுள்ளது. மேட் டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் சனியன்று காலை சாலையை கடந்து ஊருக்குள் நுழைந்தது பாகுபலி யானை தான் என உறுதி செய்த வனத்துறையினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இது வரை காட்டுக்குள் தலைமறைவாக இருந்த பாகுபலி மீண்டும் ஒற்றை யாக வந்துள்ளதால் தங்களது விளை பொருட்கள் சேதபடுத்தப் படும் என இப்பகுதி விவசாயிகளும் அதிர்ச்சியடைடந்துள்ளனர். இது குறித்து மேட்டுப்பாளையம் வனத் துறையினர் தங்களது உயர் அதி காரிகளுடன் ஆலோசனையில் ஈடு பட்டுள்ளனர்.