districts

காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

உதகை, ஜன.24- உதகை கொலை வழக்கில் நீதிமன்ற  சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய் வாளர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி மாவட்ட நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், சேரம்பாடியை அடுத்த முருக்கம்பாடி பகுதி பழங்குடி  சமுதாயத்தைச் சேர்ந்த ஓணன் என்பவ ருடைய மகன் மனு. இதேபோல் ஓண னின் சகோதரரான வெளுக்கன் என்பவ ரின் மகன் சந்திரன். இரண்டு குடும்பத்தி னருக்கும் சொந்தமான விவசாய நிலம்  தானிக்கொல்லி பகுதியில் சுமார் 4¼ ஏக் கர் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக  இவர்களுக்கிடையே விவசாயம் செய் வதில் இட பிரச்சனை இருந்ததால் இரு  குடும்பத்திற்கு இடையே தகராறு நிலவி  வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆக.21  ஆம் தேதியன்று சந்திரன் பணங்குட்டி  செட்டிமேடு என்ற இடத்தில் மனுவை  சந்தித்தார். அப்போது ஆத்திரமடைந்த சந்திரன் மனுவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து சேரம்பாடி காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து சந்தி ரனை கைது செய்தனர். இந்த வழக்கு  சம்பந்தமாக சேரம்பாடி காவல் நிலைய  அன்றைய ஆய்வாளர் வெற்றிவேல் ராஜன், உதவி ஆய்வாளர் ராஜேஷ்கு மார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்த னர். இந்த வழக்கு விசாரணை உதகை  மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5  ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலை யில் சாட்சி விசாரணைக்காக ஆய்வா ளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு இது வரை 3 முறை சம்மன் அனுப்பியும் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நி லையில் புதனன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப் போதும் இவர்கள் இருவரும் ஆஜராக வில்லை என்பதால், இருவருக்கும் பிடி வாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி  அப்துல் காதர் உத்தரவிட்டார். தற் போது காவல் ஆய்வாளர் வெற்றிவேல் ராஜன் திருச்செந்தூரிலும், உதவி ஆய் வாளர் ராஜேஷ் குமார் கோவையிலும்  பணியாற்றி வருவது குறிப்பிடத்தக் கது.