districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி துவக்கி வைத்தார். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் தியாகு, ரெனித்குமார், ரகுராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மரக்கன்றுகளை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு

நாமக்கல், ஜூன் 10– பள்ளிபாளையம் அருகே 200க்கும் மேற்பட்ட மரக்கன்று களை அழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப் பப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், சௌதா புரம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்காடு என்ற பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து இவைகள் பரா மரிக்கப்பட்டு வந்த நிலையில், ஓரளவு வளர்ந்த நிலை யில் இருந்த மரக்கன்றுகளை ஞாயிறன்று இரவு அடையா ளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சவுதாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி நந்தகோபால், நாமக்கல் மாவட்ட காவல் கண் காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அம்மனு வில், பல வகையான மரக்கன்றுகளை வெட்டியவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 5000க் கும் மேற்பட்ட மரம் மற்றும் செடிகள் தொடர்ந்து கிராமத் தின் பல்வேறு பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலை யில், மீண்டும் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருப்ப தற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலி யுறுத்தப்பட்டுள்ளது.

அணைகள் நிலவரம் 

சோலையார் அணை
நீர்மட்டம்:49.17/160 அடி
நீர்வரத்து:798க.அடி
நீர் வெளியேற்றம்: 20 கனஅடி
மழை அளவு: 43மி.மீ
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:12.40/72 அடி
நீர்வரத்து:654க.அடி.
நீர்வெளியேற்றம்: 107 கனஅடி
மழை அளவு: 15மி.மீ
ஆழியார் அணை 
நீர்மட்டம்:79.20/120அடி.
நீர்வரத்து:138க.அடி.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்

சேலம், ஜூன் 10- சேலம் மாவட்டத்தில் 5 ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி  போடும் பணி திங்களன்று துவங்கியது.

சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5 ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் திங்களன்று தொடங்கி வைத் தார். அப்போது ஆட்சியர் பேசுகையில், சேலம் மாவட்டத் தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கமும் இணைந்து திங்களன்று முதல் ஜூன்  30 ஆம் தேதி வரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவச மாக, 5 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும்  பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மாவட்ட  அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு கோமாரி  நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கோமாரி  நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு மற்றும்  கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை  வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கோமாரி நோய் தடுப்புத் திட்டத் தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டி னம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது, என்றார்.